back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 8 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 8 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

பொது அறிவு

1வலியவரோடு வழக்காடாதே;

அவர்கள் கையில்

சிக்கிக்கொள்ள நேரிடும்.

2செல்வருடன் சண்டையிடாதே;

உன்னைவிட அவர்கள்

வசதிமிக்கவர்கள்.

பொன்னாசை பலரை

அழித்திருக்கிறது;

மன்னர்களின் மனத்தையும்

கெடுத்திருக்கிறது.

3வாயாடிகளோடு வாதிடாதே;

எரியும் நெருப்பில்

எண்ணெய் வார்க்காதே.

4பண்பற்றோரிடம் நகையாடாதே;

உன் முன்னோரை

அவர்கள் பழித்துரைக்கலாம்.

5பாவத்தினின்று

மனந்திரும்புவோரைப் பழிக்காதே;

நாம் எல்லாருமே தண்டனைக்கு

உரியவர்கள் என்பதை

நினைத்துக் கொள்.

6முதியோர் எவரையும் இகழாதே;

நம்முள் சிலரும் முதுமை

அடைந்து வருகிறோம்.

7இறந்தோரைக் கண்டு மகிழாதே;

நாம் எல்லாருமே சாக வேண்டும்

என்பதை நினைவில் கொள்.

8ஞானிகளுடைய அறிவுரைகளைப்

புறக்கணியாதே;

அவர்களுடைய

பொன்மொழிகளைக் கற்றுணர்.

அவற்றால் நற்பயிற்சி பெறுவாய்;

பெரியார்களுக்குப் பணி செய்யக்

கற்றுக்கொள்வாய்.

9முதியோரின் உரைகளைப்

புறக்கணியாதே;

அவர்களும் தங்கள்

முன்னோரிடமிருந்தே

கற்றுக்கொண்டார்கள்;

அவர்களிடமிருந்து நீயும்

அறிவுக் கூர்மை பெறுவாய்;

தகுந்த நேரத்தில் தக்க

விடை கூற அறிந்துகொள்வாய்.

10பாவிகளது தீய நாட்டத்தைத்

தூண்டிவிடாதே;

அது உன்னைப் பொசுக்கிவிடும்.

11இறுமாப்புக் கொண்டோருடன்

மோதாதே; மோதினால்,

உன் சொற்களைக் கொண்டே

உன்மீது குற்றம் சாட்டுவர்.

12உன்னிலும் வலியோருக்குக்

கடன்கொடாதே;

கொடுத்தால்,

அதை இழந்து

விட்டதாக எண்ணிக்கொள்.

13உன் உடைமைக்கு மிஞ்சிப்

பிணையம் ஆகாதே;

பிணையமானால், பணம் செலுத்த

ஆயத்தமாய் இரு.

14நடுவருக்கே எதிராக

வழக்குத் தொடுக்காதே;

அவரது பெருமையை முன்னிட்டு

அவர் சார்பாகவே தீர்ப்பு

வழங்கப்படும்.

15தறுதலைகளோடு பயணம் செய்யாதே;

அவர்கள் உனக்குச்

சுமையாய் இருப்பார்கள்;

தங்களது விருப்பம் போல

நடப்பார்கள்;

அவர்களது அறிவின்மையால்

நீயும் அவர்களோடு அழிய நேரிடும்.

16முன்கோபிகளுடன் சண்டையிடாதே;

அவர்களுடன் ஆளில்லாத்

தனியிடத்திற்குச் செல்லாதே.

கொலை செய்யவும்

அவர்கள் அஞ்சுவதில்லை;

உனக்கு உதவி இல்லாத

இடத்தில் உன்னைத்

தாக்கி வீழ்த்துவார்கள்.

17அறிவிலிகளோடு கலந்தாராயாதே;

அவர்களால் இரகசியங்களைக்

காப்பாற்ற முடியாது.

18மறைக்க வேண்டியவற்றை

அன்னியர் முன் செய்யாதே;

அவர்கள் எதை வெளியிடுவார்கள்

என உனக்குத் தெரியாது.

19திறந்த உள்ளத்துடன்

எல்லாரிடமும் பேசாதே;

அவர்கள் உனக்கு நன்றி

உள்ளவர்களாய் இருக்கமாட்டார்கள்.


8:6 லேவி 19:32.
8:9 கொலோ 4:6.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks