back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 15 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 15 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள்

இவற்றையெல்லாம் செய்வார்கள்;

திருச்சட்டத்தைக் கற்றுத்

தேர்ந்தவர்கள் ஞானத்தை

அடைவார்கள்.

2தாய் போன்று ஞானம்

அவர்களை எதிர்கொள்ளும்;

இளம் மணமகள் போல்

அவர்களை வரவேற்கும்.

3அறிவுக் கூர்மை எனும்

உணவை அவர்கள் அருந்தக்

கொடுக்கும்; ஞானமாகிய

நீரைப் பருக அளிக்கும்.

4அவர்கள் அதன்மீது

சாய்ந்து கொள்வார்கள்;

விழமாட்டார்கள்;

அதைச் சார்ந்து வாழ்பவர்கள்

இகழ்ச்சி அடையமாட்டார்கள்.

5அடுத்திருப்பவருக்கு மேலாக

அது அவர்களை உயர்த்தும்;

சபை நடுவில் பேச நாவன்மை நல்கும்.

6அவர்கள் அக்களிப்பையும்

மகிழ்ச்சியின் முடியையும்

கண்டடைவார்கள்;

நிலையான பெயரை

உரிமையாக்கிக் கொள்வார்கள்.

7அறிவிலிகள் ஞானத்தை

அடையமாட்டார்கள்;

பாவிகள் அதைக் காணமாட்டார்கள்;

8இறுமாப்பினின்று அது

விலகி நிற்கும்;

பொய்யர் ஒரு போதும்

அதை நினைத்துப்பாரார்.

9பாவிகளின் வாயிலிருந்து

வரும் இறைப்புகழ்ச்சி தகாதது;

அது ஆண்டவரிடமிருந்து

அவர்களுக்கு அருளப்படவில்லை.

10ஞானத்தினின்று இறைப்புகழ்ச்சி

வெளிப்படவேண்டும்;

ஆண்டவரே அதை

வளமுறச் செய்வார்.

விருப்புரிமை

11‘ஆண்டவரே

என் வீழ்ச்சிக்குக் காரணம்’

எனச் சொல்லாதே;

தாம் வெறுப்பதை

அவர் செய்வதில்லை.

12‘அவரே என்னை நெறிபிறழச்

செய்தார்’ எனக் கூறாதே;

பாவிகள் அவருக்குத்

தேவையில்லை.

13ஆண்டவர் அருவருப்புக்குரிய

அனைத்தையும் வெறுக்கிறார்;

அவருக்கு அஞ்சிநடப்போர்

அவற்றை விரும்புவதில்லை.

14அவரே தொடக்கத்தில்

மனிதரை உண்டாக்கினர்;

தங்கள் விருப்புரிமையின்படி

செயல்பட அவர்களை விட்டுவிட்டார்.

15நீ விரும்பினால் கட்டளைகளைக்

கடைப்பிடி; பற்றுறுதியுடன்

நடப்பது உனது விருப்பத்தைப்

பொறுத்தது.

16உனக்குமுன் நீரையும்

நெருப்பையும் அவர் வைத்துள்ளார்;

உன் கையை நீட்டி உனக்கு

விருப்பமானதை எடுத்துக்கொள்.

17மனிதர்முன் வாழ்வும்

சாவும் வைக்கப்பட்டுள்ளன.

எதை அவர்கள் விரும்புகிறார்களோ

அதுவே அவர்களுக்குக்

கொடுக்கப்படும்.

18ஆண்டவரின் ஞானம் பெரிது.

அவர் ஆற்றல் மிக்கவர்;

அனைத்தையும் அவர் காண்கிறார்.

19ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் மீது

அவரது பார்வை இருக்கும்;

மனிதரின் செயல்கள் அனைத்தையும்

அவர் அறிவார்.

20இறைப்பற்றின்றி இருக்க

யாருக்கும் ஆண்டவர்

கட்டளையிட்டதில்லை;

பாவம் செய்ய எவருக்கும்

அவர் அனுமதி கொடுத்ததும் இல்லை.


15:2 சாஞா 8:2,9.
15:7 சாஞா 1:4.
15:14 தொநூ 1:26-30.
15:17 இச 30:15,19.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks