back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 7 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 7 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

பல்வகை அறிவுரை

1தீமை செய்யாதே;

தீமை ஒருபோதும் உனக்கு நேராது.

2அநீதியை விட்டு அகன்று செல்;

அநீதியும் உன்னைவிட்டு விலகும்.

3குழந்தாய், அநீதி எனும்

நிலத்தில் விதைக்காதே;

அப்போது அதில் நீ ஏழு மடங்கு

விளைச்சலை அறுக்கமாட்டாய்.

4ஆண்டவரிடமிருந்து

உயர்நிலையைத் தேடாதே;

பெருமைக்குரிய இருக்கையை

மன்னரிடமிருந்து நாடாதே.

5ஆண்டவர் திருமுன் உன்னையே

நீதிமான் ஆக்கிக்கொள்ளாதே;

மன்னர் முன் உன்னையே

ஞானி ஆக்கிக்கொள்ளாதே.

6நடுவர் ஆவதற்கு விரும்பாதே;

அநீதியை நீக்க உன்னால்

முடியாமல் போகலாம்;

வலியவருக்கு அஞ்சி

உன் நேர்மைக்கே இழுக்கு

வருவிக்கலாம்.

7நகர மக்களுக்கு எதிராகக்

குற்றம் செய்யாதே;

மக்கள்முன் உன் பெயரைக்

கெடுத்துக்கொள்ளாதே.

8செய்த பாவத்தையே

மீண்டும் செய்யாதே;

அவற்றுள் ஒன்றாவது உனக்குத்

தண்டனை பெற்றுத் தரும்.

9‘நான் அளிக்கும் எண்ணற்ற

கொடைகளை ஆண்டவர்

கண்ணோக்குவார்;

உன்னத கடவுளுக்கு

நான் செலுத்தும் பலிகளை

ஏற்றுக்கொள்வார்’ எனச் சொல்லாதே.

10நீ மன்றாடும்போது மனம்

சோர்ந்து போகாதே;

தருமம் செய்வதைப் புறக்கணியாதே.

11கசப்புணர்வு கொண்டோரை

எள்ளிநகையாடாதே;

நம்மைத் தாழ்த்தவும் உயர்த்தவும்

வல்லவர் ஒருவர் உள்ளார்.

12பொய் புனைந்து உன்

உடன்பிறப்பை ஏமாற்றாதே;

உன் நண்பர்க்கும் அவ்வாறே

செய்யாதே.

13பொய் சொல்ல விரும்பாதே;

பொய் பேசும் பழக்கம்

நன்மை தராது.

14மூப்பர் கூட்டத்தில் உளறாதே;

நீ வேண்டும் போது

பின்னிப் பின்னிப் பேசாதே.

15கடும் உழைப்பையும்

உழவுத் தொழிலையும்

வெறுக்காதே;

இவை உன்னத இறைவனால்

ஏற்படுத்தப்பட்டவை.

16பாவிகளின் கூட்டத்தோடு

சேராதே;

கடவுளின் சினம் காலம்

தாழ்த்தாது வெளிப்படும்

என்பதை மறவாதே.

17பணிவையே பெரிதும் நாடு;

இறைப்பற்றில்லாதவர்களுக்கு

நெருப்பும் புழுக்களும்

தண்டனையாகக் கிடைக்கும்.

பிறரிடம் உறவு

18பணத்துக்காக நண்பரைக்

கைவிடாதே; உண்மையான

சகோதரனை ஓபிர் நாட்டுப்

பொன்னுக்காகவும் பண்டம் மாற்றாதே.

19ஞானமுள்ள நல்ல மனைவியை

இழந்துவிடாதே;

அவளது நன்னயம்

பொன்னைவிட உயர்ந்தது.

20உண்மையுடன் உழைக்கும் உன்

அடிமைகளுக்கும்,

தங்கள் உயிரையே

உனக்காகக் கொடுக்கும்

கூலியாள்களுக்கும்,

எவ்வகைத் தீங்கும் செய்யாதே.

21அறிவுக்கூர்மை கொண்ட

அடிமைக்கு அன்புகாட்டு;

அவனுக்கு விடுதலை

கொடுக்க மறுக்காதே.

22உன் வீட்டில் விலங்குகள்

இருந்தால் அவற்றைக்

கவனித்துக்கொள்;

அவை உனக்குப் பயன்

கொடுத்தால் அவற்றை

வைத்துக்கொள்.

23உனக்குப் பிள்ளைகள் இருந்தால்

அவர்களுக்கு நற்பயற்சி அளி;

இளமைமுதலே பணிந்திருக்கச் செய்.

24உனக்குப் பெண் பிள்ளைகள்

இருந்தால், அவர்களது கற்பில்

அக்கறை காட்டு;

அவர்களுக்கு மிகுதியாகச்

செல்லம் கொடுக்காதே.

25உன் மகளுக்குத்

திருமணம் செய்துவை;

உன் தலையாய கடமையைச்

செய்தவன் ஆவாய்.

அறிவுக்கூர்மை படைத்தவருக்கே

உன் மகளை மணமுடித்துக்கொடு.

26உன் உள்ளத்திற்கு ஏற்ற மனைவி

உனக்கு இருந்தால் அவளைத்

தள்ளி வைக்காதே;

நீ வெறுக்கும் மனைவியை

நம்பிவிடாதே.

27உன் தந்தையை உன்

முழு உள்ளத்துடன் மதித்து நட;

உன் தாயின் பேறுகாலத்

துன்பத்தை மறவாதே.

28அவர்கள் உன்னைப்

பெற்றெடுத்தார்கள்;

அதற்கு ஈடாக உன்னால்

எதையும் செய்ய முடியாது

என்பதை நினைவில் இருத்து.

29உன் முழு உள்ளத்தோடு

ஆண்டவருக்கு அஞ்சு;

அவருடைய குருக்களை மதித்து நட.

30உன்னை உண்டாக்கியவர்மீது

உன் முழு வலிமையோடும்

அன்பு செலுத்து;

அவருடைய திருப்பணியாளர்களைக்

கைவிடாதே.

31ஆண்டவருக்கு அஞ்சு;

குருக்களைப் பெருமைப்படுத்து;

குருக்களுக்குரிய பங்காகிய

முதற்கனி, குற்றம்போக்கும் பலி,

உழைப்பின் பயன், தூய்மையாக்கும் பலி,

தூய பொருள்களின்

முதற்பயன் ஆகியவற்றை

உனக்குக் கட்டளையிட்டுள்ளபடி

கொடு.

32ஏழைகளுக்குத் தாராளமாய்க்

கொடு;

இதனால் இறை ஆசி

முழுமையாக உனக்குக் கிடைக்கும்;

33உயிர் வாழ்வோர் அனைவருக்கும்

கனிவோடு கொடு;

உயிர் நீத்தோர்க்கும்

அன்பு காட்ட மறவாதே.

34அழுவோரைத் தவிர்க்காதே;

புலம்புவோரோடு புலம்பு.

35நோயாளிகளைச் சந்திக்கத்

தயங்காதே;

இத்தகைய செயல்

மற்றவர்களின் அன்பினை

உனக்குப் பெற்றுத் தரும்.

36எல்லாவற்றிலும் உன் முடிவை

நினைவில் கொள்;

அவ்வாறெனில் ஒருபோதும்

நீ பாவம் செய்யமாட்டாய்.


7:1 பேது 3:13.
7:5 யோபு 9:2.
7:6 லேவி 19:15.
7:9 நீமொ 21:27.
7:10 லூக் 18:1.
7:12 தொநூ 4:8.
7:14 சஉ 5:1-2; மத் 6:7.
7:15 தொநூ 3:19.
7:17 எசா 66:24.
7:21 விப 21:2; இச 15:12.
7:24-25 சீஞா 26:10-12; 42:9-11.
7:27 தோபி 4:3-4.
7:30 இச 6:5.
7:32 இச 15:8.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks