back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 71 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 71 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

முதியோரின் மன்றாட்டு

1ஆண்டவரே! உம்மிடம் நான்

அடைக்கலம் புகுந்துள்ளேன்;

ஒருபோதும் நான் வெட்கமுற

விடாதேயும்.

2உமது நீதிக்கேற்ப

என்னை விடுவித்தருளும்;

எனக்கு நீர் செவிசாய்த்து

என்னை மீட்டுக் கொள்ளும்.

3என் அடைக்கலப் பாறையாக

நீர் இருந்தருளும்;

கோட்டை அரணாயிருந்து

என்னை மீட்டருளும்;

ஏனெனில், நீர் எனக்குக்

கற்பாறையாகவும்

அரணாகவும் இருக்கின்றீர்.

4என் கடவுளே, பொல்லார் கையினின்று

என்னைக் காத்தருளும்;

நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர்

பிடியினின்று என்னைக் காத்தருளும்.

5என் தலைவரே, நீரே என் நம்பிக்கை;

ஆண்டவரே, இளமைமுதல்

நீரே என் நம்பிக்கை.

6பிறப்பிலிருந்து நான் உம்மைச்

சார்ந்துள்ளேன்;

தாய் வயிற்றிலிருந்து

நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்;

உம்மையே நான் எப்போதும்

புகழ்ந்து போற்றுவேன்.

7பலருக்கு நான்

ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன்;

நீரே எனக்கு உறுதியான அடைக்கலம்.

8என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே;

நாளெல்லாம் நான் பேசுவது

உமது பெருமையே.

9முதிர் வயதில்

என்னைத் தள்ளிவிடாதேயும்;

என் ஆற்றல் குன்றும் நாளில்

என்னைக் கைவிடாதேயும்.

10ஏனெனில், என் எதிரிகள்

பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே;

என் உயிரைப் பறிக்கத் தேடுவோர்

ஒன்றுகூடிச் சதி செய்கின்றனர்;

11“கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்;

அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்;

அவனைக் காப்பாற்ற

ஒருவருமில்லை” என்று அவர்கள் சொல்கின்றார்கள்.

12கடவுளே! என்னைவிட்டுத்

தொலைவில் போய்விடாதேயும்;

என் கடவுளே! எனக்குத் துணை செய்ய

விரைந்து வாரும்.

13என்னைப் பழிப்பவர்கள்

வெட்கி அழிவார்களாக!

எனக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவர்களை

இழிவும் மானக்கேடும் சூழட்டும்!

14ஆனால், நான்

என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்;

மேலும் மேலும் உம்மைப்

புகழ்ந்து கொண்டிருப்பேன்.

15என் வாய் நாள்தோறும்

உமது நீதியையும் நீர் அருளும்

மீட்பையும் எடுத்துரைக்கும்;

உம் அருட் செயல்களை

என்னால் கணிக்க இயலாது.

16தலைவராகிய ஆண்டவரே!

உமது வலிமைமிகு செயல்களை

எடுத்துரைப்பேன்;

உமக்கே உரிய நீதிமுறைமையைப்

புகழ்ந்துரைப்பேன்.

17கடவுளே, என் இளமைமுதல்

எனக்குக் கற்பித்து வந்தீர்;

இனிவரும் நாள்களிலும்

உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.

18கடவுளே, உம் கைவன்மையையும்

ஆற்றலையும்

இனிவரும் தலைமுறைக்கு

நான் அறிவிக்குமாறு

வயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட

என்னைக் கைவிடாதேயும்.

19கடவுளே, உமது நீதி

வானம் வரைக்கும் எட்டுகின்றது;

மாபெரும் செயல்களை

நீர் செய்திருக்கிறீர்;

கடவுளே, உமக்கு நிகர் யார்?

20இன்னல்கள் பலவற்றையும்

தீங்குகளையும்

நான் காணுமாறு செய்த நீரே,

எனக்கு மீண்டும் உயிரளிப்பீர்;

பாதாளத்தினின்று என்னைத்

தூக்கி விடுவீர்.

21என் மேன்மையைப் பெருகச் செய்து

மீண்டும் என்னைத் தேற்றுவீர்.

22என் கடவுளே, நான்

வீணையைக் கொண்டு உம்மையும்

உமது உண்மையையும் புகழ்வேன்;

இஸ்ரயேலின் தூயரே, யாழிசைத்து

உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

23நான் உமக்குப் புகழ்பாடுகையில்

என் நா அக்களிக்கும்;

நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும்

அக்களிக்கும்.

24என் வாழ்நாளெல்லாம் என் நா

உமது நீதியை எடுத்துரைக்கும்.

ஏனெனில் எனக்குத்

தீங்குசெய்யப் பார்த்தவர்கள்

வெட்கமும் மானக்கேடும்

அடைந்து விட்டார்கள்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks