back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 86 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 86 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

உதவிக்காக வேண்டல்
(தாவீதின் மன்றாட்டு)

1ஆண்டவரே! எனக்குச்

செவிசாய்த்துப் பதிலளியும்;

ஏனெனில், நான் எளியவன்; வறியவன்.

2என் உயிரைக் காத்தருளும்;

ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்;

உம் ஊழியனைக் காத்தருளும்;

நீரே என் கடவுள்! நான் உம்மீது

நம்பிக்கை கொண்டுள்ளேன்.

3என் தலைவரே! என் மேல் இரக்கமாயிரும்;

ஏனெனில், நான் முழுவதும்

உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

4உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்;

என் தலைவரே! உம்மை நோக்கி

என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.

5ஏனெனில் என் தலைவரே!

நீர் நல்லவர்; மன்னிப்பவர்;

உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும்

பேரன்பு காட்டுபவர்.

6ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச்

செவிகொடும்;

உம் உதவியை நாடும்

என் குரலைக் கேட்டருளும்.

7என் துன்ப நாளில்

உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;

நீரும் எனக்குப் பதிலளிப்பீர்.

8என் தலைவரே! தெய்வங்களுள்

உமக்கு நிகரானவர் எவருமில்லை.

உமது செயல்களுக்கு ஒப்பானவை

எவையுமில்லை.

9என் தலைவரே! நீர் படைத்த

மக்களினத்தார் அனைவரும்

உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்;

உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.

10ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்;

வியத்தகு செயல்கள் புரிபவர்;

நீர் ஒருவரே கடவுள்!

11ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப

நான் நடக்குமாறு

உமது வழியை எனக்குக் கற்பியும்,

உமது பெயருக்கு அஞ்சுமாறு

என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்.

12என் தலைவரே! என் கடவுளே!

என் முழு இதயத்தோடு

உம்மைப் புகழ்வேன்;

என்றென்றும் உமது பெயருக்கு
மாட்சி அளிப்பேன்.

13ஏனெனில், நீர் என்மீது காட்டிய

அன்பு பெரிது!

ஆழமிகு பாதாளத்தினின்று

என்னுயிரை விடுவித்தீர்!

14கடவுளே! செருக்குற்றோர்

எனக்கெதிராய் எழுந்துள்ளனர்;

கொடியோர் கூட்டம்

என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது;

அவர்களுக்கு உம்மைப்பற்றிய

நினைவே இல்லை.

15என் தலைவரே!

நீரோ இரக்கமிகு இறைவன்;

அருள் மிகுந்தவர்;

விரைவில் சினமுறாதவர்;

பேரன்பும் உண்மையும்

பெரிதும் கொண்டவர்.

16என்னைக் கண்ணோக்கி

என்மீது இரங்கும்;

உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்;

உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்.

17நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை

எனக்கு அருளும்;

என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்;

ஏனெனில், ஆண்டவராகிய நீர்தாமே

எனக்குத் துணைசெய்து

ஆறுதல் அளித்துள்ளீர்.


86:9 திவெ 15:4.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks