back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 66 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 66 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

நன்றிப் புகழ்ப்பா
(பாடகர் தலைவர்க்கு: புகழ்ப்பாடல்)

1அனைத்துலகோரே!

கடவுளைப் போற்றி

ஆர்ப்பரியுங்கள்!

2அவரது பெயரின் மாட்சியைப்

புகழ்ந்து பாடுங்கள்;

அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.

3கடவுளை நோக்கி

‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை;

உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக

உம் எதிரிகள் உமது முன்னலையில்

கூனிக் குறுகுவர்;

4அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்;

அவர்கள் உம் புகழ் பாடிடுவர்;

உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’

என்று சொல்லுங்கள். (சேலா)

5வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்!

அவர் மானிடரிடையே ஆற்றிவரும்

செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.

6கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்;

ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள்.

அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.

7அவர் தமது வலிமையால்

என்றென்றும் அரசாள்கிறார்!

அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக்

கவனித்து வருகின்றன;

கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த்

தலைதூக்காதிருப்பராக! (சேலா)

8மக்களினங்களே!

நம் கடவுளைப் போற்றுங்கள்;

அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி

கேட்கச் செய்யுங்கள்.

9நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே;

அவர் நம் கால்களை இடற விடவில்லை.

10கடவுளே! எங்களை ஆய்ந்து,

வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்;

11கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்;

பளுவான சுமைகளை

எங்கள் முதுகின் மீது சுமத்தினீர்.

12மனிதரை எங்கள் தலைகள்மீது

நடந்துபோகச் செய்தீர்;

நெருப்பிலும் தண்ணீரிலும்

அகப்பட்டிருந்தோம்; ஆயினும்,

நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக்

கொண்டுவந்து சேர்த்தீர்.

13எரிபலியுடன்

உமது இல்லத்தினுள் செல்வேன்;

என் பொருத்தனைகளை

உமக்குச் செலுத்துவேன்.

14அவற்றை என் துன்ப வேளையில்

என் நா உரைத்தது;

என் வாய் உறுதி செய்தது.

15கொழுத்த கன்றுகளை,

செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு,

உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்;

காளைகளையும்

வெள்ளாட்டுக் கிடாய்களையும்

உமக்குப் பலியிடுவேன். (சேலா)

16கடவுளுக்கு அஞ்சி நடப்போரே!

அனைவரும் வாரீர்! கேளீர்!

அவர் எனக்குச் செய்ததனை

எடுத்துரைப்பேன்.

17அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது;

அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.

18என் உள்ளத்தில் தீய எண்ணங்களை

வளர்த்திருந்தேனாகில்,

என் தலைவர் எனக்குச்

செவிசாய்த்திருக்கமாட்டார்.

19ஆனால், உண்மையில்

கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்;

என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார்.

20என் மன்றாட்டைப் புறக்கணியாத

கடவுள் போற்றி!

தம் பேரன்பை என்னிடமிருந்து

நீக்காத இறைவன் போற்றி!


66:6 விப 14:21; யோசு 3:14-17.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks