back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 22 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 22 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

துயர்மிகு புலம்பல்
(பாடகர் தலைவர்க்கு: ‘காலைப் பெண்மான்’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)

1என் இறைவா, என் இறைவா,

ஏன் என்னைக் கைவிட்டீர்?

என்னைக் காப்பாற்றாமலும்,

நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும்

ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?

2என் கடவுளே,

நான் பகலில் மன்றாடுகின்றேன்;

நீர் பதில் அளிப்பதில்லை,

இரவிலும் மன்றாடுகின்றேன்;

எனக்கு அமைதி கிடைப்பதில்லை.

3நீரோ தூயவராய் விளங்குகின்றீர்;

இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய்

வீற்றிருக்கின்றீர்;

4எங்கள் மூதாதையர்

உம்மில் நம்பிக்கை வைத்தனர்;

அவர்கள் நம்பியதால்

நீர் அவர்களை விடுவித்தீர்.

5உம்மை அவர்கள் வேண்டினார்கள்;

விடுவிக்கப்பட்டார்கள்;

உம்மை அவர்கள் நம்பினார்கள்;

ஏமாற்றமடையவில்லை.

6நானோ ஒரு புழு, மனிதனில்லை;

மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்;

மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.

7என்னைப் பார்ப்போர் எல்லாரும்

ஏளனம் செய்கின்றனர்;

உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,

8‛ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே!

அவர் இவனை மீட்கட்டும்;

தாம் அன்பு கூர்ந்த அவனை

அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர்.

9என்னைக் கருப்பையினின்று

வெளிக்கொணர்ந்தவர் நீரே;

என் தாயிடம் பால்குடிக்கையிலேயே

என்னைப் பாதுகாத்தவரும் நீரே!

10கருப்பையிலிருந்தே

உம்மைச் சார்ந்திருந்தேன்;

நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல்

என் இறைவன் நீரே!

11என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்;

ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது;

மேலும், உதவி செய்வார் யாருமில்லை.

12காளைகள் பல என்னைச்

சூழ்ந்து கொண்டுள்ளன;

பாசானின் கொழுத்த எருதுகள்

என்னை வளைத்துக் கொண்டன.

13அவர்கள் என்னை விழுங்கத்

தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்;

இரைதேடிச் சீறி முழங்கும்

சிங்கம்போல் பாய்கின்றார்கள்.

14நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்;

என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின;

என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று;

என் உள்ளுறுப்புகளின் நடுவே

உருகிப்போயிற்று.

15என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது;

என் நாவு மேலண்ணத்தோடு

ஒட்டிக்கொண்டது; என்னைச்

சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.

16தீமை செய்வோரின் கூட்டம்

என்னை வளைத்துக் கொண்டது;

நாய்கள் என அவர்கள் என்னைச்

சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும்,

கால்களையும் துளைத்தார்கள்.

17என் எலும்புகளை எல்லாம்

நான் எண்ணிவிடலாம்; அவர்கள்

என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்.

18என் ஆடைகளைத் தங்களிடையே

பங்கிட்டுக் கொள்கின்றனர்;

என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.

19நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத்

தொலைவில் போய்விடாதேயும்;

என் வலிமையே! எனக்குத் துணை செய்ய

விரைந்து வாரும்.

20வாளுக்கு இரையாகாதபடி

என் உயிரைக் காத்தருளும்;

இந்த நாய்களின் வெறியினின்று

என் ஆருயிரைக் காப்பாற்றும்;

21இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து

என்னைக் காப்பாற்றும்;

காட்டெருமைகளின் கொம்புகளில்

சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.

புகழ்ச்சிப் பாடல்

22உமது பெயரை

என் சகோதரருக்கு அறிவிப்பேன்;

சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

23ஆண்டவருக்கு அஞ்சுவோரே;

அவரைப் புகழுங்கள்;

யாக்கோபின் மரபினரே,

அனைவரும் அவரை

மாட்சிமைப்படுத்துங்கள்;

இஸ்ரயேல் மரபினரே,

அனைவரும் அவரைப் பணியுங்கள்.

24ஏனெனில், எளியோரின் சிறுமையை

அவர் அற்பமாக எண்ணவில்லை;

அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை;

தமது முகத்தை அவர்களுக்கு

மறைக்கவுமில்லை;
தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில்

அவர்களுக்குச் செவிசாய்த்தார்.

25மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ்

உம்மிடமிருந்து எழுவதாக!

உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில்

என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.

26எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்;

ஆண்டவரை நாடுவோர்

அவரைப் புகழ்வராக!

அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!

27பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர்

அனைவரும் இதை உணர்ந்து

ஆண்டவர் பக்கம் திரும்புவர்;

பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும்

அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.

28ஏனெனில் அரசு ஆண்டவருடையது;

பிற இனத்தார்மீதும்

அவர் ஆட்சி புரிகின்றார்.

29மண்ணின் செல்வர் யாவரும்

அவரைப் பணிவர்;*

புழுதிக்குள் இறங்குவோர் யாவரும்

தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும்

அவரை வணங்குவர்.

30வருங்காலத் தலைமுறையினர்

அவரைத் தொழுவர்;

இனிவரும் தலைமுறையினருக்கு

ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.

31அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்;

இனி பிறக்கப்போகும் மக்களுக்கு

‛இதை அவரே செய்தார்’ என்பர்.


22:1 மத் 27:46; மாற் 15:34.
22:18 மத் 27:35; மாற் 15:24; லூக் 23;34; யோவா 19:24.
22:22 எபி 2:12.


22:29 * ‘உணவுண்டு அவரைப் பணிவர்’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks