back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 38 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 38 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

துன்புற்றவரின் மன்றாட்டு
(தாவீதின் புகழ்ப்பா; நினைவு கூர்தலுக்காகப் பாடியது)

1ஆண்டவரே, என்மீது

சினங்கொண்டு

என்னைக் கண்டியாதேயும்;

என் மீது சீற்றம்கொண்டு

என்னைத் தண்டியாதேயும்;

2ஏனெனில், உம் அம்புகள்

என்னுள் பாய்ந்திருக்கின்றன;

உமது கை என்னை

அழுத்திக் கொண்டிருக்கின்றது.

3நீர் கடுஞ்சினங்கொண்டதால்

என் உடலில் நலமே இல்லை;

என் பாவத்தால் என் எலும்புகளில்

வலுவே இல்லை.

4என் குற்றங்கள் தலைக்குமேல்

போய்விட்டன;

தாங்கவொண்ணாச் சுமைபோல

அவை என்னை வெகுவாய்
அழுத்துகின்றன.

5என் புண்கள் அழுகி

நாற்றமெடுக்கின்றன;

என் மதிகேடுதான்

இதற்கெல்லாம் காரணம்.

6நான் மிகவும் ஒடுங்கிப்போனேன்;

நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன்.

7என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று;

என் உடலில் சற்றேனும் நலம் இல்லை.

8நான் வலுவற்றுப் போனேன்;

முற்றிலும் நொறுங்கிப்போனேன்;

என் உள்ளக் கொதிப்பினால்

கதறுகின்றேன்.

9என் தலைவரே, என் பெருமூச்செல்லாம்

உமக்குத் தெரியும்;

என் வேதனைக் குரல்

உமக்கு மறைவாயில்லை.

10என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது;

என் வலிமை என்னைவிட்டு அகன்றது;

என் கண்களும்கூட ஒளி இழந்தன.

11என் நண்பர்களும் தோழர்களும்

நான் படும் வாதை கண்டு

விலகி நிற்கின்றனர்;

என் உறவினரும் என்னைவிட்டு

ஒதுங்கி நிற்கின்றனர்.

12என் உயிரைப் பறிக்கத்தேடுவோர்

எனக்குக் கண்ணி வைக்கின்றனர்;

எனக்குத் தீங்கிழைக்கத் துணிந்தோர்

என் அழிவைப் பற்றிப் பேசுகின்றனர்;

எப்போதும் எனக்கெதிராய்ச்

சூழ்ச்சி செய்கின்றனர்.

13நானோ செவிடர்போல் காது கேளாமலும்

ஊமைபோல் வாய் திறவாமலும்
இருக்கின்றேன்.

14உண்மையாகவே, நான்

செவிப்புலனற்ற மனிதர் போலும்

மறுப்புரை கூறாத

நாவினர் போலும் ஆனேன்;

15ஏனெனில் ஆண்டவரே,

நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்;

என் தலைவராகிய கடவுளே,

செவிசாய்த்தருளும்.

16‛அவர்கள் என்னைப் பார்த்துக்

களிக்க விடாதேயும்;

என் கால் தடுமாறினால் அவர்கள்

பெருமை கொள்வர்’ என்று சொன்னேன்.

17நான் தடுமாறிவிழும் நிலையில்

இருக்கின்றேன்;

நான் எப்போதும் வேதனையில் உள்ளேன்.

18என் குற்றத்தை நான்

அறிக்கையிடுகின்றேன்;

என் பாவத்தின் பொருட்டு

நான் அஞ்சுகின்றேன்.

19காரணமின்றி என்னைப் பகைப்போர்

வலுவாய் உள்ளனர்;

வீணாக என்னை வெறுப்போர்

பலராய் உள்ளனர்;

20நன்மைக்குப் பதிலாக அவர்கள்

எனக்குத் தீமை செய்கின்றனர்;

நன்மையே நாடும் என்னைப்

பகைக்கின்றனர்;

21ஆண்டவரே! என்னைக் கைவிடாதேயும்;

என் கடவுளே!

என்னைவிட்டு அகன்றுவிடாதேயும்.

22என் தலைவரே! மீட்பரே!

எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks