back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 33 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 33 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

புகழ்ச்சிப் பாடல்

1நீதிமான்களே,

ஆண்டவரில் களிகூருங்கள்;

நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது

பொருத்தமானதே.

2யாழிசைத்து ஆண்டவருக்கு

நன்றி செலுத்துங்கள்;

பதின் நரம்பு யாழினால்

அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;

3புத்தம்புது பாடல் ஒன்றை

அவருக்குப் பாடுங்கள்;

திறம்பட இசைத்து

மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.

4ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;

அவருடைய செயல்கள் எல்லாம்

நம்பிக்கைக்கு உரியவை.

5அவர் நீதியையும் நேர்மையையும்
விரும்புகின்றார்;

அவரது பேரன்பால்

பூவுலகு நிறைந்துள்ளது.

6ஆண்டவரது வாக்கினால்

வானங்கள் உண்டாயின;

அவரது சொல்லின் ஆற்றலால்

வான்கோள்கள் எல்லாம் உருவாயின.

7அவர் கடல்நீரைக்

குவியல்போல் சேர்த்து வைத்தார்;

அந்நீரை ஆழ் நிலவறைகளில்

சேமித்து வைத்தார்.

8அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக!

உலகில் வாழ்வோர் அனைவைரும்

அவருக்கு அஞ்சிநடுங்குவராக!

9அவர் சொல்லி உலகம் உண்டானது;

அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது.

10வேற்றினத்தாரின் திட்டங்களை

ஆண்டவர் முறியடிக்கின்றார்;

மக்களினத்தாரின் எண்ணங்களைக்

குலைத்து விடுகின்றார்.

11ஆண்டவரின் எண்ணங்களோ

என்றென்றும் நிலைத்திருக்கும்;

அவரது உள்ளத்தின் திட்டங்கள்

தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.

12ஆண்டவரைத் தன் கடவுளாகக்

கொண்ட இனம் பேறுபெற்றது;

அவர் தமது உரிமைச் சொத்தாகத்

தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

13வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்;

மானிடர் அனைவரையும் காண்கின்றார்.

14தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து

உலகெங்கும் வாழ்வோரைக்
கூர்ந்து நோக்குகின்றார்.

15அவர்களின் உள்ளங்களை

உருவாக்குகின்றவர் அவரே!

அவர்களின் செயல்கள் அனைத்தையும்

உற்று நோக்குபவரும் அவரே!

16தன் படைப் பெருக்கத்தால்

வெற்றிபெரும் அரசருமில்லை;

தன் வலிமையின் மிகுதியால்

உயிர் தப்பிய வீரருமில்லை.

17வெற்றி பெறப்

போர்க்குதிரையை நம்புவது வீண்;

மிகுந்த வலுவுள்ளதாயினும்

அது விடுவிக்காது.

18தமக்கு அஞ்சி நடப்போரையும்

தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும்

ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.

19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்;
அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.

20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;

அவரே நமக்குத் துணையும்
கேடயமும் ஆவார்.

21நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்;

ஏனெனில், அவரது திருப்பெயரில்

நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.

22உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,

உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Your Faith. Your Way.
Get the Catholic Gallery app for offline Mass readings, prayers, audio Bibles, and yearly Bible Reading plans.
No Thanks