back to top
HomeTamilஎசாயா அதிகாரம் - 62 - திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 62 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1சீயோனின் வெற்றி

வைகறை ஒளியெனவும்,

அதன் மீட்பு சுடர் விளக்கெனவும்

வெளிப்படும்வரை,

அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்;

எருசலேம் பொருட்டுச்

செயலற்று அமைதியாயிரேன்.

2பிறஇனத்தார்

உன் வெற்றியைக் காண்பர்;

மன்னர் யாவரும்

உன் மேன்மையைப் பார்ப்பர்;

ஆண்டவர் தம் நாவினால் சூட்டும்

புதியதொரு பெயரால்

நீ அழைக்கப்படுவாய்.

3ஆண்டவரின் கையில் நீ

அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்;

உன் கடவுளின் கரத்தில்

அரச மகுடமாய் விளங்குவாய்.

4‘கைவிடப்பட்டவள்’ என்று

இனி நீ பெயர்பெற மாட்டாய்;

‘பாழ்பட்டது’ என

இனி உன் நாடு அழைக்கப்படாது;

நீ ‘எப்சிபா’* என்று அழைக்கப்படுவாய்;

உன் நாடு ‘பெயுலா’**என்று பெயர் பெறும்.

ஏனெனில், ஆண்டவர் உன்னை

விரும்புகின்றார்;

உன் நாடு மணவாழ்வு பெறும்.

5இளைஞன் கன்னிப் பெண்ணை

மணப்பதுபோல

உன்னை எழுப்பியவர்

உன்னை மணந்து கொள்வார்;

மணமகன் மணப்பெண்ணில்

மகிழ்வதுபோல்

உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

6எருசலேமே, உன் மதில்கள்மேல்

காவலரை நிறுத்தியுள்ளேன்;

இராப்பகலாய் ஒருபோதும்

அவர்கள் அமைதியாய் இரார்;

ஆண்டவருக்கு நினைப்பூட்டுவோரே!

நொடிப்பொழுதும் அமைதியாய் இராதீர்.

7அவர் எருசலேமை நிலைநாட்டி,

பூவுலகில் அது புகழ் பெறும்வரை

அவரை ஓய்வெடுக்க விடாதீர்.

8ஆண்டவர் தம் வலக்கையின் மேலும்

வலிமைமிக்க தம் புயத்தின் மேலும்

ஆணையிட்டுக் கூறியது:

உன் தானியத்தை இனி

நான் உன் பகைவருக்கு

உணவாகக் கொடுக்கமாட்டேன்;

உன் உழைப்பால் கிடைத்த

திராட்சை இரசத்தை

வேற்றின மக்கள் பருகமாட்டார்கள்.

9அறுவடை செய்தவர்களே

அதை உண்டு ஆண்டவரைப் போற்றுவர்.

பழம் பறித்தவர்களே

என் தூயகச் சுற்றுமுற்றங்களில்

இரசம் பருகுவர்.

10செல்லுங்கள், வாயில்கள் வழியாய்க்

கடந்து செல்லுங்கள்;

மக்கள் வரப் பாதையைத் தயாராக்குங்கள்;

அமையுங்கள், நெடுஞ்சாலையைச்

சீராக அமையுங்கள்;

கற்களை அகற்றுங்கள்;

மக்களினங்கள்முன்

கொடியைத் தூக்கிப் பிடியுங்கள்.

11உலகின் கடைக்கோடி வரை

ஆண்டவர் பறைசாற்றியது:

“மகள் சீயோனிடம் சொல்லுங்கள்:

இதோ, உன் மீட்பு வருகின்றது,

அவரது வெற்றிப்பரிசு

அவருடன் உள்ளது;

அவரது செயலின் பயன்

அவர் முன்னே உள்ளது.”

12‘புனித மக்களினம்’ என்றும்

‘ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்’ என்றும்

அவர்கள் அழைக்கப்படுவார்கள்;

நீயோ, ‘தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்’

என்றும்

இனி ‘கைவிடப்படாத நகர்’ என்றும்

பெயர் பெறுவாய்.


62:11 எசா 40:10; திவெ 22:12.


62:4 * எபிரேயத்தில், ‘அவளில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்பது பொருள்.
62:4 ** எபிரேயத்தில், ‘மணமுடித்தவள்’ என்பது பொருள்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks