back to top
HomeTamilஎசாயா அதிகாரம் - 59 - திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 59 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

மக்களின் பாவங்கள் கண்டிக்கப்படல்

1மீட்க இயலாதவாறு ஆண்டவரின்

கை குறுகிவிடவில்லை;

கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது

மந்தமாகி விடவில்லை.

2உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும்,

உங்கள் கடவுளுக்கும் இடையே

பிளவை உண்டாக்கியுள்ளன;

உங்கள் பாவங்களே

அவர் செவி சாய்க்காதவாறு

அவரது முகத்தை உங்களுக்கு

மறைத்துள்ளன.

3உங்கள் கைகள் இரத்தப்பழியால்

கறைபட்டுள்ளன;

உங்கள் விரல்கள் தீமையால்

தீட்டுப்பட்டுள்ளன.

உங்கள் உதடுகள்

பொய்களை உதிர்க்கின்றன;

உங்கள் நாக்கு

தீயவற்றை முணுமுணுக்கின்றது.

4நீதியான வழக்கைக் கொண்டு வருபவர்

எவரும் இல்லை;

உண்மையுடன் வழக்காடுபவர்

யாருமில்லை;

வெறுமையான வாதங்கள்மீது

நம்பிக்கை வைத்துப்

பொய்யைப் பேசி,

வஞ்சனையைக் கருத்தரித்துத்

தீமையைப் பெற்றெடுக்கின்றனர்.

5நச்சுப் பாம்பின் முட்டைகளை

அடைகாக்கிறார்கள்;

சிலந்திப் பூச்சியின் வலையைப்

பின்னுகிறார்கள்;

அவற்றின் முட்டைகளை விழுங்குபவர்

சாவார்;

உடைபடும் முட்டையிலிருந்து

கட்டுவிரியன் வெளிவரும்.

6அவற்றின் வலைகள்

உடையாகப் பயன்படா;

அவற்றின் வேலைப்பாடுகளைக்

கொண்டு எவரும் தம்மைப்

போர்த்துக்கொள்ளமாட்டார்;

அவர்களின் செயல்கள் தீயன;

அவர்களின் கையில் இருப்பன

வன்முறைச் செயல்களே!

7தீமை செய்ய அவர்கள் கால்கள்

விரைகின்றன;

குற்றமற்ற இரத்தம் சிந்த

அவர்கள் துடிக்கின்றனர்;

அவர்கள் எண்ணங்கள் தீயவை;

பாழாக்குதலும் அழிவுமே

அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.

8அமைதி வழியை அவர்கள் அறியார்;

நீதியின் பாதையில்

அவர்கள் நடக்கவில்லை;

தாங்கள் செல்லும் பாதைகளைக்

கோணலாக்கினர்;

அவற்றில் நடப்பவர் எவரும்

அமைதியை அறியார்.

மக்கள் தம் பாவங்களை அறிக்கையிடல்

9ஆதலால், நீதி எங்களுக்கு

வெகு தொலையில் உள்ளது;

நேர்மை எங்களை நெருங்கி வரவில்லை.

ஒளிக்கெனக் காத்திருந்தோம்;

காரிருள்தான் கிட்டியது;

விடியலை எதிர்பார்த்தோம்;

இருளிலேயே நடக்கின்றோம்;

10பார்வையற்றோரைப் போல்

சுவரைப்பிடிக்க

நாங்கள் தடவுகின்றோம்;

கண்ணில்லாதவரைப்போல்

எங்கள் வழியில் தடுமாறுகின்றோம்;

நண்பகலிலும் மங்கிய பொழுதிலும்

செத்தவர்போல் இருக்கின்றோம்.

11கரடியைப் போல் நாங்கள் யாவரும்

உறுமுகின்றோம்;

புறாக்களைப்போல் பெருமூச்சுடன்

விம்முகின்றோம்;

நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம்,

ஒன்றையும் காணவில்லை;

விடுதலையை எதிர்பார்த்திருந்தோம்,

அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.

12உம் திருமுன் எங்கள் குற்றங்கள்

பெருகியுள்ளன;

எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச்

சான்று சொல்கின்றன;

எங்கள் குற்றங்கள் எங்களோடு தான்

இருக்கின்றன;

எங்கள் தீச்செயல்களை

நாங்களே அறிவோம்.

13ஆண்டவருக்கு எதிராகக்

கிளர்ச்சி செய்து

அவரை வஞ்சித்தோம்;

எங்கள் கடவுளைப் பின்பற்றாமல்

அகன்று போனோம்;

ஒடுக்குவதையும் கிளர்ச்சி செய்வதையும்

பற்றிப் பேசினோம்;

பொய்யானவற்றை மனதில் உருவாக்கி

அவற்றை மொழிந்தோம்.

14நீதி துரத்தப்பட்டது;

நேர்மை தொலையில் நின்றது;

பொது இடங்களில்

வாய்மை நிலைகுலைந்தது;

உண்மைக்கு அங்கே இடம் இல்லை.

15உண்மை என்பதே

இல்லாமல் போய்விட்டது;

தீமையினின்று விலகியவர்

சூறையாடப்படுகின்றார்;

ஆண்டவர் அதைக் கண்டார்;

அவர் பார்வையில் நீதியின்மை

தீயதாய்ப் பட்டது.

மக்களை மீட்க ஆண்டவரின் ஆயத்தம்

16இதில் தலையிட ஓர் ஆள்கூட

இல்லை என்று கண்டு

ஆண்டவர் திகைப்புற்றார்;

அவரது கையே அவருக்கு

வெற்றி கொணர்ந்து;

அவரது நேர்மையே

அவரைத் தாங்கி நின்றது.

17அவர் நேர்மையை மார்புக் கவசமாய்

அணிந்துகொண்டார்;

விடுதலையைத் தலைச்சீராவாய்த்

தம் தலையில் வைத்துக்கொண்டார்;

அநீதிக்குப் பழிவாங்குதலை

ஆடையாய் உடுத்திக் கொண்டார்;

அன்புவெறியை மேலாடையாகப்

போர்த்திக் கொண்டார்.

18தம் பகைவரின் செயல்களுக்குத்

தக்க கைம்மாறு அளிப்பார்;

அவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்;

தம் எதிரிகளுக்குத்

தக்க தண்டனை வழங்குவார்;

தீவு நாடுகளுக்கும்

தகுந்த பதிலடி கொடுப்பார்.

19மேலை நாட்டினர்

ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;

கீழைநாட்டினர்

அவரது மாட்சிக்கு நடுங்குவர்;

ஆண்டவரின் பெருங்காற்று அடித்து வர,

ஓடிவரும் ஆறென அவர் வருவார்.

20சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்;

யாக்கோபில் தீயதனின்று

திரும்பியவரிடம் வருவார்,

என்கிறார் ஆண்டவர்.

21அவர்களுடன் நான் செய்து கொள்ளும்

உடன்படிக்கை இதுவே:

உன்மேல் இருக்கும் என் ஆவியும்

உன் வாயில் நான் வைத்துள்ள

என் வார்த்தைகளும்

உன் வாயினின்றும்

உன் வழி மரபினர் வாயினின்றும்

வழிவழிவரும் உன்

தலைமுறையினர் வாயினின்றும்

இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது,

என்கிறார் ஆண்டவர்.


59:7-8 உரோ 3:15-17.
59:16 எசா 63:5.
59:17 எபே 6:14,17; 1 தெச 5:8.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks