Home » சீராக்கின் ஞானம் அதிகாரம் – 30 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 30 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

பிள்ளை வளர்ப்பு

1தம் மகனிடம் அன்பு

கொண்டிருக்கும் தந்தை அவனை

இடைவிடாது கண்டிப்பார்;

அப்போது அவர்

தம் இறுதி நாள்களில்

மகிழ்வோடு இருப்பார்.

2தம் மகனை நன்னெறியில்

பயிற்றுவிப்பவர் அவனால்

நம்மை அடைவார்; தமக்கு

அறிமுகமானவர்களிடையே

அவனைப் பற்றிப் பெருமைப்படுவார்.

3தம் மகனுக்குக் கல்வி புகட்டும்

தந்தை எதிரியைப் பொறாமை

அடையச் செய்கிறார்; தம்

நண்பர்கள்முன் அவன்

பொருட்டுப் பெரும் மகிழ்ச்சி அடைவார்.

4அவனுடைய தந்தை இறந்தும்

இறவாதவோர்போல் ஆவார்;

ஏனெனில் தம் போன்றவனைத்

தமக்குப்பின் விட்டுச்சென்றுள்ளார்.

5தாம் வாழ்ந்தபோது தந்தை

மகனைப் பார்த்தார், மகிழ்ந்தார்;

தம் இறப்பிலும் அவர் வருத்தப்படவில்லை.

6தம் எதிரிகளைப் பழிவாங்குபவனை,

தம் நண்பர்களுக்குக்

கைம்மாறு செய்பவனை

அவர் விட்டுச்சென்றுள்ளார்.

7தம் மகனுக்கு மிகுதியாகச்

செல்வம் கொடுப்பவர்.

அவன் சிணுங்குவதற்கெல்லாம்

உள்ளம் உளைவார்;

அவன் சிறு கூச்சலிடும்

போதெல்லாம் அவர் கலக்கம்

அடைவார்.

8பயிற்றுவிக்கப்படாத குதிரை

முரட்டுத்தனம் காட்டுகிறது;

கட்டுப்பாடில்லாத மகன்

அடக்கமற்றவன் ஆகிறான்.

9உன் குழந்தைக்குச்

செல்லம் கொடு;

அது உன்னை அச்சுறுத்தும்.

அதனுடன் விளையாடு;

அது உன்னை வருத்தும்.

10அதனுடன் சேர்ந்து சிரிக்காதே;

இல்லையேல் நீயும் சேர்ந்து

துன்புறுவாய்; இறுதியில்

அல்லற்படுவாய்.

11இளைஞனாய் இருக்கும்போதே

அவனுக்கு அதிகாரம் கொடுக்காதே;

[அவனுடைய தவறுகளைக்

கண்டு கொள்ளாமல் இராதே.

12இளைஞனாய் இருக்கும்போதே

அவனை அடக்கி வளர்.]

சிறுவனாய் இருக்கும்போதே

அவனை அடித்து வளர்;

இல்லையேல் அவன் அடங்காதவனும்

கீழ்ப்படியாதவனுமாக

மாறுவான். [அவனால்

உனக்கு மனவருத்தமே உண்டாகும்.]

13உன் மகனுக்கு நற்பயிற்சி அளி;

அவனைப் பயன்படுத்த

முயற்சி செய்.

அப்போது அவனது

வெட்கங்கெட்ட நடத்தையால்

நீ வருந்தமாட்டாய்.

உடல்நலம்

14உடல்நலமும் வலிமையும்

கொண்ட ஏழையர் நோயுற்ற

செல்வரினும் மேலானோர்

15உடல்நலமும் உறுதியும்

பொன்னைவிடச் சிறந்தவை;

கட்டமைந்த உடல் அளவற்ற

செல்வத்தினும் சிறந்தது.

16உடல்நலத்தைவிட உயர்ந்த

செல்வமில்லை; உள்ள

மகிழ்ச்சியைவிட மேலான

இன்பமில்லை.

17கசப்பான வாழ்க்கையை

விடச் சாவே சிறந்தது;

தீராத நோயைவிட நிலைத்த

ஓய்வே உயர்ந்தது.

18மூடிய வாய்மீது பொழிந்த

நல்ல பொருள்கள் கல்லறையில்

வைத்த உணவுப்படையல்

போன்றவை.

19காணிக்கையால் சிலைக்கு

வரும் பயன் என்ன?

அது உண்பதுமில்லை, நுகர்வதுமில்லை.

ஆண்டவரால் தண்டிக்கப்படுவோரும்

இதைப் போன்றோரே.

20கன்னிப்பெண்ணை அண்ணகன்

அணைத்துப் பெருமூச்சு

விடுதல்போல் அவர்கள்

கண்ணால் காண்கிறார்கள்;

பெருமூச்சு விடுகிறார்கள்.

மகிழ்ச்சி

21உன் உள்ளத்திற்கு

வருத்தம் விளைவிக்காதே;

உன் திட்டங்களால்

உன்னையே துன்பத்துக்கு

உட்படுத்தாதே.

22உள்ள மகிழ்ச்சியே மனிதரை

வாழ வைக்கிறது;

அகமகிழ்வே மானிடரின்

வாழ்நாளை வளரச் செய்கிறது.

23உன் உள்ளத்திற்கு உவகையூட்டு;

உன்னையே தேற்றிக்கொள்;

வருத்தத்தை உன்னிடமிருந்து

தொலைவில் விரட்டி விடு.

வருத்தம் பலரை அழித்திருக்கிறது;

அதனால் எவ்வகைப் பயனுமில்லை.

24பொறாமையும் சீற்றமும்

உன் வாழ்நாளைக் குறைக்கும்;

கவலை, உரிய காலத்திற்கு முன்பே

முதுமையை வருவிக்கும்.

25மகிழ்ச்சியான நல்ல உள்ளம்

உணவுப் பொருள்களைச்

சுவைத்து இன்புறுகிறது.


30:1 நீமொ 13:24.
30:21-25 சஉ 11:9-10; நீமொ 17:22.


30:11ஆ-12அ [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
30:12 [ ] என்னும் பாடம் சில சுவடிகளில் காணப்படுகிறது.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks