திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
ஆண்டவரே நம் ஆயர்
(தாவீதின் புகழ்ப்பா)
1ஆண்டவரே என் ஆயர்;
எனக்கேதும் குறையில்லை.
2பசும்புல் வெளிமீது எனை அவர்
இளைப்பாறச் செய்வார்;
அமைதியான நீர்நிலைகளுக்கு
எனை அழைத்துச் செல்வார்.
3அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;
தம் பெயர்க்கேற்ப
எனை நீதிவழி நடத்திடுவார்;
4மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்
நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால்
எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;
உம் கோலும் நெடுங்கழியும்
என்னைத் தேற்றும்.
5என்னுடைய எதிரிகளின் கண் முன்னே
எனக்கொரு விருந்தினை
ஏற்பாடு செய்கின்றீர்;
என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;
எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.
6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்
உம் அருள் நலமும் பேரன்பும்
என்னைப் புடைசூழ்ந்து வரும்;
நானும் ஆண்டவரின் இல்லத்தில்
நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.