back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 145 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 145 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

அரசராம் கடவுள் போற்றி!
(தாவீதின் திருப்பாடல்)

1என் கடவுளே, என் அரசே!

உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்;

உமது பெயரை என்றும்

எப்பொழுதும் போற்றுவேன்.

2நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்;

உமது பெயரை என்றும்

எப்பொழுதும் புகழ்வேன்.

3ஆண்டவர் மாண்புமிக்கவர்;

பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்;

அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.

4ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு

உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்;

வல்லமைமிகு உம் செயல்களை

எடுத்துரைக்கும்.

5உமது மாண்பின்

மேன்மையையும் மாட்சியையும்

வியத்தகு உம் செயல்களையும்

நான் சிந்திப்பேன்.

6அச்சந்தரும் உம் செயல்களின்

வல்லமையைப்பற்றி

மக்கள் பேசுவார்கள்;

உமது மாண்பினை நான்

விரித்துரைப்பேன்,

7அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை

நினைந்துக் கொண்டாடுவார்கள்;

உமது நீதியை எண்ணி

ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்.

8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;

எளிதில் சினம் கொள்ளாதவர்;

பேரன்பு கொண்டவர்.

9ஆண்டவர் எல்லாருக்கும்

நன்மை செய்பவர்;

தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும்

இரக்கம் காட்டுபவர்.

10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும்

உமக்கு நன்றி செலுத்தும்;

உம்முடைய அன்பர்கள்

உம்மைப் போற்றுவார்கள்.

11அவர்கள் உமது அரசின் மாட்சியை

அறிவிப்பார்கள்;

உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.

12மானிடர்க்கு

உம் வல்லமைச் செயல்களையும்

உமது அரசுக்குரிய

மாட்சியின் பேரொளியையும்

புலப்படுத்துவார்கள்.

13உமது அரசு

எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு;

உமது ஆளுகை

தலைமுறை தலைமுறையாக உள்ளது.

ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும்

உண்மையானவர்;

தம் செயல்கள் அனைத்திலும்

தூய்மையானவர்.

14தடுக்கி விழும் யாவரையும்

ஆண்டவர் தாங்குகின்றார்.

தாழ்த்தப்பட்ட யாவரையும்

தூக்கிவிடுகின்றார்.

15எல்லா உயிரினங்களின் கண்களும்

உம்மையே நோக்குகின்றன;

தக்க வேளையில் நீரே அவற்றிற்கு

உணவளிக்கின்றீர்.

16நீர் உமது கையைத் திறந்து

எல்லா உயிரினங்களின்

விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.

17ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும்

நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும்

இரக்கச் செயல்களே.

18தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,

உண்மையாய்த் தம்மை நோக்கி

மன்றாடும் யாவருக்கும்,

ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.

19அவர் தமக்கு அஞ்சி நடப்போரின்

விருப்பத்தை நிறைவேற்றுவார்;

அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து

அவர்களைக் காப்பாற்றுவார்.

20ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும்

அனைவரையும் பாதுகாக்கின்றார்;

பொல்லார் அனைவரையும் அழிப்பார்.

21என் வாய் ஆண்டவரின் புகழை

அறிவிப்பதாக!

உடல்கொண்ட அனைத்தும்

அவரது திருப்பெயரை

என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Your Faith. Your Way.
Get the Catholic Gallery app for offline Mass readings, prayers, audio Bibles, and yearly Bible Reading plans.
No Thanks