back to top
HomeTamilவிடுதலைப் பயணம் அதிகாரம் - 15 - திருவிவிலியம்

விடுதலைப் பயணம் அதிகாரம் – 15 – திருவிவிலியம்

விடுதலைப் பயணம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

மோசேயின் வெற்றிப்பாடல்

1அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்தேத்திப் பாடிய பாடல் வருமாறு:

ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்;
ஏனெனில், அவர் மாட்சியுடன்

வெற்றிபெற்றார்;

குதிரையையும், குதிரை வீரனையும்
கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.

2ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்.

அவரே என் விடுதலை; என் கடவுள்.

அவரை நான் புகழ்ந்தேத்துவேன்.

அவரே என் மூதாதையரின் கடவுள்;

அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.

3போரில் வல்லவர் ஆண்டவர்;

‛ஆண்டவர்’ என்பது அவர் பெயராம்.

4பார்வோனின் தேர்களையும் படையையும்

அவர் கடலில் தள்ளிவிட்டார்;

அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள்

செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர்.

5ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல்

மூழ்கிப் போயினர்;

ஆழங்கள் அவர்களை

மூடிக்கொண்டன.

6ஆண்டவரே, உம் வலக்கை

வலிமையில் மாண்புற்றது;

ஆண்டவரே, உமது வலக்கை

பகைவரைச் சிதறடிக்கின்றது.

7உம் மாபெரும் மாட்சியால் உம்

எதிரிகளைத் தகர்த்தெறிந்தீர்;

உமது சீற்றக் கனலைக் கக்கித் தாளடி

போல் அவர்களை எரித்துவிட்டீர்.

8உம் நாசியின் மூச்சால்

நீர்த்திரள்கள் குவிந்தன;

பேரலைகள் சுவரென நின்றன;

கடல் நடுவில் ஆழங்கள்

உறைந்து போயின.

9எதிரி சொன்னான்:

‛துரத்திச் செல்வேன்;

முன் சென்று மடக்குவேன்;

கொள்ளைப் பொருளைப்

பங்கிடுவேன்; என் மனம் இதனால்

நிறைவு கொள்ளும்;

என் வாளை உருவுவேன்;

என் கை அவர்களை அழிக்கும்.’

10நீரோ உமது காற்றை வீசச் செய்தீர்;

கடல் அவர்களை மூடிக்கொண்டது;

ஆற்றல் மிகு நீர்த்திரளில் அவர்கள்

ஈயம் போல் அமிழ்ந்தனர்.

11ஆண்டவரே, தெய்வங்களுள்

உமக்கு நிகரானவர் எவர்?

தூய்மையில் மேலோங்கியவர்,

அஞ்சத்தக்கவர், புகழ்ச்சிக்குரியவர்,

அருஞ்செயல் ஆற்றுபவர் ஆகிய

உமக்கு நிகர் யார்?

12நீர் உமது வலக்கையை நீட்டினீர்.

நிலம் அவர்களை விழுங்கி விட்டது.

13நீர் மீட்டுக்கொண்ட மக்களை

உம் பேரருளால்

வழிநடத்திச் சென்றீர்;

உம் ஆற்றலால் அவர்களை உம்

புனித உறைவிடம் நோக்கி

வழி நடத்திச் சென்றீர்.

14இதைக் கேள்வியுற்ற மக்களினங்கள்

அனைவரும் கதிகலங்கினர்;

பெலிஸ்தியாவில் குடியிருப்போரை

நடுக்கம் ஆட்கொண்டது.

15ஏதோம் தலைவர்கள் அச்சமுற்றனர்;

மோவாபு தலைவர்களும்

நடுநடுங்கினர்;

கானானில் குடியிருப்போர்

நிலை குலைந்தனர்.

16அச்சமும் திகிலும் அவர்களை

ஆட்கொண்டன; ஆண்டவரே,

உம் மக்கள் கடந்து செல்லும் வரை,

அதாவது நீர் உடைமையாக்கிக்

கொண்ட மக்கள் கடந்து செல்லும்வரை,

உம் கைவன்மை கண்டு அவர்கள்

கல்போன்று மலைத்து நின்றனர்.

17ஆண்டவரே, எம் தலைவரே!

நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும்,

உம் கைகள் உருவாக்கிய

திருத்தலமும் அமைந்துள்ள உம்

உரிமைச் சொத்தான மலைக்கு

அவர்களைக் கொண்டு சென்று

நிலைநாட்டினீர்.

18ஆண்டவர் என்றென்றும்

அரசாள்வார்.

மிரியாமின் பாடல்

19பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர் அனைவரும் கடலில் சென்று கொண்டிருக்க, ஆண்டவர் அவர்கள்மேல் கடல் நீர்த்திரளைத் திருப்பிவிட்டார். இஸ்ரயேல் மக்களோ கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.

20இறைவாக்கினரும் ஆரோனின் தங்கையுமான மிரியாம் கஞ்சிரா ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டாள். பெண்டிர் அனைவரும் கஞ்சிரா கொட்டிக் கொண்டும் நடனமாடிக்கொண்டும் அவள்பின் சென்றனர்.

21அப்போது மிரியாம்,

“ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்;

ஏனெனில், அவர் மாட்சியுடன்

வெற்றி பெற்றார்;

குதிரையையும் குதிரை வீரனையும்

கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்”

என்று பல்லவியாகப் பாடினாள்.

கசப்பு நீர்

22பின்பு மோசே இஸ்ரயேலரை செங்கடலிலிருந்து புறப்பட்டுப் போகச் செய்தார். அவர்கள் மூன்று நாள்கள் சூர் பாலைநிலத்தில் பயணம் செய்தனர். அங்குத் தண்ணீர் எதுவுமே தென்படவில்லை.

23பின்னர் அவர்கள் மாராவைச் சென்றடைந்தனர். மாராவிலிருந்த தண்ணீரைப் பருக அவர்களால் இயலவில்லை. அது கசப்பாக இருந்தது. இதனால்தான் அவ்விடத்திற்கு ‛மாரா’* என்ற பெயர் வழங்கியது.

24‘நாங்கள் எதைத்தான் குடிப்போம்’ என்று கூறி, மக்கள் மோசேக்கு எதிராக முறுமுறுத்தனர்.

25அவரும் ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினார். ஆண்டவர் அவருக்கு ஒரு மரத்துண்டைக் காட்டினார். அதை அவர் தண்ணீரில் எறிய, தண்ணீரும் சுவைபெற்றது. அங்கே சட்டங்களையும் ஒழுங்குகளையும் தந்து ஆண்டவர் அவர்களைச் சோதித்தார்.

26மேலும் அவர், “உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவிசாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி, அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர்” என்றார்.

27பின்னர் அவர்கள் ஏலிம் சென்றடைந்தனர். அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன. தண்ணீருக்கருகில் அவர்கள் பாளையம் இறங்கினர்.


15:1 திவெ 15:3.
15:2 திபா 118:14; எசா 12:2.


15:23 * எபிரேயத்தில், ‘கசப்பு’ என்பது பொருள்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks