back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 17 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 17 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

மாசற்றவனின் மன்றாட்டு
(தாவீதின் மன்றாட்டு)

1ஆண்டவரே, என் வழக்கின்

நியாயத்தைக் கேட்டருளும்;

என் வேண்டுதலை உற்றுக் கேளும்;

வஞ்சகமற்ற உதட்டினின்று எழும்

என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.

2உம் முன்னிலையினின்று

எனக்கு நீதி கிடைக்கட்டும்;

உம் கண்கள் நேரியன காணட்டும்.

3என் உள்ளத்தை ஆய்ந்தறியும்;

இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்;

என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்;

தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்;

என் வாய் பிழை செய்யக்கூடாதென

உறுதி கொண்டேன்.

4பிற மானிடர் செய்வது போல் அல்லாமல்,

நீர் உரைத்த வாக்கிற்கிணங்க,

வன்முறையாளரின் வழிகளை விட்டு

விலகியுள்ளேன்.

5என் நடத்தை

உம் பாதைகளில் அமைந்துள்ளது;

என் காலடிகள்

உம் வழியினின்று பிறழவில்லை.

6இறைவா, நான் உம்மை நோக்கிக்

கூப்பிடுகின்றேன்; ஏனெனில்,
நீர் எனக்குப் பதில் அளிப்பீர்.

என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்;

என் விண்ணப்பத்திற்குச்
செவிசாய்த்தருளும்.

7உமது வியத்தகு பேரன்பைக்

காண்பித்தருளும்;

உம்மிடம் அடைக்கலம் புகுவோரை

அவர்களுடைய எதிரிகளிடமிருந்து

உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!

8உமது கண்ணின் மணியென

என்னைக் காத்தருளும்;

உம்முடைய சிறகுகளின் நிழலில்

என்னை மூடிக்கொள்ளும்.

9என்னை ஒழிக்கத் தேடும்

பொல்லாரிடமிருந்தும்

என்னைச் சூழ்ந்து கொண்ட

எதிரிகளிடமிருந்தும்

என்னை மறைத்துக் கொள்ளும்.

10அவர்கள் ஈவு இரக்கமற்ற கல்நெஞ்சர்கள்;

தங்கள் வாயினால்

இறுமாப்புடன் பேசுபவர்கள்.

11அவர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர்;

இதோ! என்னை
வளைத்துக் கொண்டனர்;

அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு,

வைத்த கண் வாங்காது
காத்திருக்கின்றனர்.

12பீறிப்போடத் துடிக்கும்

சிங்கத்திற்கு அவர்கள் ஒப்பாவர்;

மறைவிடத்தில் பதுங்கியிருக்கும்

இளஞ்சிங்கத்திற்கு நிகராவர்.

13ஆண்டவரே, எழுந்து வாரும்;

அவர்களை நேருக்குநேர்

எதிர்த்து முறியடையும்;

பொல்லாரிடமிருந்து உமது வாளால்

என்னைக் காத்தருளும்.

14ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து –

இவ்வுலகமே தங்கள் கதியென

வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து –

உமது கைவலிமையினால்

என்னைக் காப்பாற்றும். அவர்களுக்கென

நீர் ஒதுக்கி வைத்துள்ளவற்றால்

அவர்கள் வயிற்றை நிரப்பும்;

அவர்களின் மைந்தர்

வேண்டிய மட்டும் நிறைவு பெறட்டும்;

எஞ்சியிருப்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு

விட்டுச்செல்லட்டும்;

15நானோ நேர்மையில் நிலைத்திருந்து

உமது முகம் காண்பேன்;

விழித்தெழும்போது,

உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Your Faith. Your Way.
Get the Catholic Gallery app for offline Mass readings, prayers, audio Bibles, and yearly Bible Reading plans.
No Thanks