back to top
HomeTamilஓசேயா அதிகாரம் - 5 - திருவிவிலியம்

ஓசேயா அதிகாரம் – 5 – திருவிவிலியம்

ஓசேயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

குருக்களுக்கும் அரச குடும்பத்தினருக்கும் எதிரான குற்றச்சாட்டு

1குருக்களே, இதைக் கேளுங்கள்;

இஸ்ரயேல் குடும்பத்தாரே,

கவனியுங்கள்;

அரசனின் வீட்டாரே,

செவி கொடுங்கள்;

உங்களுக்கு எதிராகவே

தீர்ப்புத் தரப்படுகின்றது;

நீங்கள் மிஸ்பாவில்

ஒரு கண்ணியாய் இருக்கின்றீர்கள்;

தாபோர்மீது விரிக்கப்பட்ட

வலையுமாயிருக்கின்றீர்கள்.

2வஞ்சகர்கள் கொலைத் தொழிலில்

ஆழ்ந்துள்ளார்கள்;

அவர்கள் அனைவரையும்

தண்டிப்பேன்.

3எப்ராயிமை நான் அறிந்திருக்கிறேன்;

இஸ்ரயேல் எனக்கு மறைவானதன்று;

எப்ராயிமே! நீ வேசித்தனத்தில்

ஈடுபட்டிருக்கின்றாய்;

இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கின்றது;

4அவர்களுடைய கடவுளிடம் திரும்பிவர

அவர்களின் செயல்கள் விடுவதில்லை;

ஏனெனில், விபசாரப் புத்தி

அவர்களை ஆட்கொண்டுள்ளது;

ஆண்டவரைப்பற்றிய அறிவு

அவர்களுக்கில்லை.

5இஸ்ரயேலின் இறுமாப்பு

அவனுக்கு எதிராகச் சான்று கூறும்;

இஸ்ரயேலும் எப்ராயிமும்

தங்கள் தீச்செயலால்

இடறிவிழுவார்கள்;

யூதாவும் அவர்களோடு

இடறிவிழுவான்.

6தங்கள் ஆடு மாடுகளோடு

அவர்கள் ஆண்டவரைத்

தேடிப் போவார்கள்;

ஆனால் அவரைக் காணமாட்டார்கள்;

அவர் அவர்களை விட்டு விலகி விட்டார்.

7ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம்

செய்தார்கள்; ஏனெனில்

அன்னியப் பிள்ளைகளைப்

பெற்றார்கள்; இப்பொழுதே அவர்களையும்

அவர்கள் நிலங்களையும்

அமாவாசை விழுங்கப் போகிறது.

8கிபயாவில் கொம்பு ஊதுங்கள்;

இராமாவில் எக்காளம் முழக்குங்கள்;

பெத்தாவேனில் போர்க்குரல்

எழுப்புங்கள்;

பென்யமின்! உன்னைப்

பின் தொடருகின்றார்கள்.

9தண்டனை வழங்கப்படும் நாளில்

எப்ராயிம் பாழாவான்;

இஸ்ரயேலின் குலங்களுக்கு

உறுதியாய் நேரிடப் போவதையே

அறிவிக்கின்றேன்.

10யூதாவின் தலைவர்கள்

எல்லைக்கல்லைத் தள்ளி

வைக்கிறவர்களுக்கு ஒப்பாவார்கள்;

அவர்கள் மேல் என் கோபத்தை

வெள்ளப்பெருக்கைப்போல்

கொட்டித் தீர்ப்பேன்.

11எப்ராயிம் ஒடுக்கப்படுகின்றான்;

தண்டனைத் தீர்ப்பால்

நொறுக்கப்படுகின்றான்;

அவன் வீணான கட்டளைகளைப்

பின்பற்றுவதில் கருத்தாய் இருந்தான்.

12ஆகையால் எப்ராயிமுக்கு

நான் விட்டில்போல் இருக்கின்றேன்;

யூதாவின் வீட்டாருக்குப்

புற்றுநோய்போல் இருக்கின்றேன்.

வேற்று நாட்டுடன் செய்த மதியீனமான உடன்படிக்கை

13எப்ராயிம் தன் பிணியைக்

கண்டுகொண்டான்;

யூதா தன் காயத்தை

உணர்ந்து கொண்டான்;

எப்ராயிம் அசீரியாவில் புகலிடம் தேடி,

யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான்.

ஆனால், உங்களைக் குணமாக்கவோ,

உங்கள் காயங்களை ஆற்றவோ

அவனால் இயலாது.

14ஏனெனில், நான் எப்ராயிமுக்குச்

சிங்கத்தைப் போலவும்,

யூதாவின் வீட்டாருக்குச்

சிங்கக்குட்டியைப்போலவும்

இருப்பேன்;

நான், நானே அவர்களைக்

கவ்விப் பிடிப்பேன்;

தூக்கிக்கொண்டு போவேன்;

விடுவிப்பவன் எவனுமே இரான்.

15தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று,

என்னைத் தேடி வரும்வரை,

நான் என் இடத்திற்குத்

திரும்பிப் போய்விடுவேன்.

தங்கள் துன்பத்திலே அவர்கள்

என்னைத் தேடுவார்கள்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks