back to top
HomeTamilஓசேயா அதிகாரம் - 5 - திருவிவிலியம்

ஓசேயா அதிகாரம் – 5 – திருவிவிலியம்

ஓசேயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

குருக்களுக்கும் அரச குடும்பத்தினருக்கும் எதிரான குற்றச்சாட்டு

1குருக்களே, இதைக் கேளுங்கள்;

இஸ்ரயேல் குடும்பத்தாரே,

கவனியுங்கள்;

அரசனின் வீட்டாரே,

செவி கொடுங்கள்;

உங்களுக்கு எதிராகவே

தீர்ப்புத் தரப்படுகின்றது;

நீங்கள் மிஸ்பாவில்

ஒரு கண்ணியாய் இருக்கின்றீர்கள்;

தாபோர்மீது விரிக்கப்பட்ட

வலையுமாயிருக்கின்றீர்கள்.

2வஞ்சகர்கள் கொலைத் தொழிலில்

ஆழ்ந்துள்ளார்கள்;

அவர்கள் அனைவரையும்

தண்டிப்பேன்.

3எப்ராயிமை நான் அறிந்திருக்கிறேன்;

இஸ்ரயேல் எனக்கு மறைவானதன்று;

எப்ராயிமே! நீ வேசித்தனத்தில்

ஈடுபட்டிருக்கின்றாய்;

இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கின்றது;

4அவர்களுடைய கடவுளிடம் திரும்பிவர

அவர்களின் செயல்கள் விடுவதில்லை;

ஏனெனில், விபசாரப் புத்தி

அவர்களை ஆட்கொண்டுள்ளது;

ஆண்டவரைப்பற்றிய அறிவு

அவர்களுக்கில்லை.

5இஸ்ரயேலின் இறுமாப்பு

அவனுக்கு எதிராகச் சான்று கூறும்;

இஸ்ரயேலும் எப்ராயிமும்

தங்கள் தீச்செயலால்

இடறிவிழுவார்கள்;

யூதாவும் அவர்களோடு

இடறிவிழுவான்.

6தங்கள் ஆடு மாடுகளோடு

அவர்கள் ஆண்டவரைத்

தேடிப் போவார்கள்;

ஆனால் அவரைக் காணமாட்டார்கள்;

அவர் அவர்களை விட்டு விலகி விட்டார்.

7ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம்

செய்தார்கள்; ஏனெனில்

அன்னியப் பிள்ளைகளைப்

பெற்றார்கள்; இப்பொழுதே அவர்களையும்

அவர்கள் நிலங்களையும்

அமாவாசை விழுங்கப் போகிறது.

8கிபயாவில் கொம்பு ஊதுங்கள்;

இராமாவில் எக்காளம் முழக்குங்கள்;

பெத்தாவேனில் போர்க்குரல்

எழுப்புங்கள்;

பென்யமின்! உன்னைப்

பின் தொடருகின்றார்கள்.

9தண்டனை வழங்கப்படும் நாளில்

எப்ராயிம் பாழாவான்;

இஸ்ரயேலின் குலங்களுக்கு

உறுதியாய் நேரிடப் போவதையே

அறிவிக்கின்றேன்.

10யூதாவின் தலைவர்கள்

எல்லைக்கல்லைத் தள்ளி

வைக்கிறவர்களுக்கு ஒப்பாவார்கள்;

அவர்கள் மேல் என் கோபத்தை

வெள்ளப்பெருக்கைப்போல்

கொட்டித் தீர்ப்பேன்.

11எப்ராயிம் ஒடுக்கப்படுகின்றான்;

தண்டனைத் தீர்ப்பால்

நொறுக்கப்படுகின்றான்;

அவன் வீணான கட்டளைகளைப்

பின்பற்றுவதில் கருத்தாய் இருந்தான்.

12ஆகையால் எப்ராயிமுக்கு

நான் விட்டில்போல் இருக்கின்றேன்;

யூதாவின் வீட்டாருக்குப்

புற்றுநோய்போல் இருக்கின்றேன்.

வேற்று நாட்டுடன் செய்த மதியீனமான உடன்படிக்கை

13எப்ராயிம் தன் பிணியைக்

கண்டுகொண்டான்;

யூதா தன் காயத்தை

உணர்ந்து கொண்டான்;

எப்ராயிம் அசீரியாவில் புகலிடம் தேடி,

யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான்.

ஆனால், உங்களைக் குணமாக்கவோ,

உங்கள் காயங்களை ஆற்றவோ

அவனால் இயலாது.

14ஏனெனில், நான் எப்ராயிமுக்குச்

சிங்கத்தைப் போலவும்,

யூதாவின் வீட்டாருக்குச்

சிங்கக்குட்டியைப்போலவும்

இருப்பேன்;

நான், நானே அவர்களைக்

கவ்விப் பிடிப்பேன்;

தூக்கிக்கொண்டு போவேன்;

விடுவிப்பவன் எவனுமே இரான்.

15தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று,

என்னைத் தேடி வரும்வரை,

நான் என் இடத்திற்குத்

திரும்பிப் போய்விடுவேன்.

தங்கள் துன்பத்திலே அவர்கள்

என்னைத் தேடுவார்கள்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks