back to top
HomeTamilயோபு அதிகாரம் - 5 - திருவிவிலியம்

யோபு அதிகாரம் – 5 – திருவிவிலியம்

யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1இப்போது கூப்பிட்டுப்பாரும்!

யார் உமக்குப் பதிலுரைப்பார்?

எந்தத் தூயவரிடம் துணை தேடுவீர்?

2உண்மையில், அறிவிலியைத்தான்

எரிச்சல் கொல்லும்;

பேதையைத் தான் பொறாமை சாகடிக்கும்,

3அறிவிலி வேரூன்றுவதை

நானே கண்டேன்;

ஆனால் உடனே அவன் உறைவிடத்தில்

வெம்பழி விழுந்தது,

4அவனுடைய மக்களுக்குப்

பாதுகாப்பு இல்லை; ஊர்மன்றத்தில்

அவர்கள் நொறுக்கப்படுகின்றனர்;

மீட்பார் எவரும் அவர்க்கு இல்லாது போயினர்.

5அவனது அறுவடையைப் பசித்தவர் உண்பர்;

முள்ளுக்கு நடுவிலுள்ளதையும்

அவர்கள் பறிப்பர்; பேராசைக்காரர்

அவன் சொத்துக்காகத் துடிப்பர்.

6ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது;

மண்ணினின்று இன்னல் விளையாது.

7நெருப்புச்சுடர் மேல்நோக்கி எழுவதுபோல,

துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்.

8ஆனால், நான் கடவுளையே நாடுவேன்;

அவரிடம் மட்டுமே என் வாழ்க்கை ஒப்புவிப்பேன்.

9ஆராய முடியாப் பெரியனவற்றையும்

எண்ணிலடங்கா வியக்கத்

தக்கனவற்றையும் செய்பவர் அவரே.

10மண் முகத்தே மழையைப் பொழிபவரும்

வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.

11அவர் தாழ்ந்தோரை

மேலிடத்தில் அமர்த்துகின்றார்;

அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.

12வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்;

அவர்களின் கைளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா.

13ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில்

சிக்க வைக்கின்றார்;

வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன;

14அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்;

நண்பகலிலும் இரவில்போல்

தடுமாறுகின்றனர்.

15அவர் வறியவரை அவர்களின்

வாயெனும் வாளினின்று காக்கின்றார்;

எளியவரை வலியவரின்

கையினின்று மீட்கின்றார்.

16எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு;

அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.

17இதோ! கடவுள் திருத்தும் மனிதர்

பேறு பெற்றோர்; ஆகவே,

வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர்.

18காயப்படுத்தினாலும்

கட்டுப்போடுபவர் அவரே;

அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே.

19ஆறு வகை அல்லல்களினின்றும்

அவர் உம்மை மீட்பார்;

ஏழாவதும் உமக்கு இன்னல் தராது.

20பஞ்சத்தில் சாவினின்றும்

சண்டையில் வாள் முனையினின்றும்

உம்மை விடுவிப்பார்.

21நாவின் சொல்லடியினின்றும்

நீர் மறைக்கப்படுவீர்;

நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர்.

22அழிவிலும் பஞ்சத்திலும் நீர் நகுவீர்;

மண்ணக விலங்குகளுக்கு மருளீர்.

23வயல்வெளிக் கற்களோடு

உம் உடன்படிக்கை இருக்கும்;

காட்டு விலங்குகளோடும்

நீர் அமைதியில் வாழ்வீர்.

24உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர்;

உம் மந்தையைச் சென்று காண்கையில்

ஒன்றும் குறைவுபடாதிருக்கும்.

25உமது வித்து பெருகுவதையும்,

உமது வழிமரபினர் நிலத்துப்

புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.

26பழுத்த வயதில் தளர்வின்றிக்

கல்லறை செல்வீர்,

பருவத்தே மேலோங்கும் கதிர்மணி போல்.

27இதுவே யாம் கண்டறிந்த உண்மை!

செவிகொடுப்பீர்; நீவிரே கண்டுண‌ர்வீர்.


5:13 1 கொரி 3:19.
5:17 நீமொ 3:11; எபி 12:5-6.
5:18 ஓசே 6:1.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Your Faith. Your Way.
Get the Catholic Gallery app for offline Mass readings, prayers, audio Bibles, and yearly Bible Reading plans.
No Thanks