back to top
HomeTamilமீக்கா அதிகாரம் - 4 - திருவிவிலியம்

மீக்கா அதிகாரம் – 4 – திருவிவிலியம்

மீக்கா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

ஆண்டவரின் அனைத்துலக அருளாட்சி
(எசா 2:1-4)

1“இறுதி நாள்களில் ஆண்டவரின்

கோவில் அமைந்துள்ள மலை;

மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய்

நிலைநிறுத்தப்படும்;

குன்றுகளுக்கெல்லாம் மேலாய்

உயர்த்தப்படும்;

மக்களினங்கள் அதை நோக்கிச்

சாரைசாரையாய் வருவார்கள்.

2வேற்றினத்தார் பலர்

அங்கு வந்து சேர்ந்து,

‘புறப்படுங்கள்,

ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்;

யாக்கோபின் கடவுளது

கோவிலுக்குப் போவோம்;

அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்;

நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’

என்பார்கள்;

ஏனெனில் சீயோனிலிருந்து

திருச்சட்டம் வெளிப்படும்;

எருசலேமிலிருந்து

ஆண்டவரின் வாக்கு புறப்படும்.

3அவரே பல மக்களினங்களுக்கு

இடையே உள்ள வழக்குகளைத்

தீர்த்துவைப்பார்;

தொலைநாடுகளிலும்

வலிமைமிக்க வேற்றினத்தார்க்கு

நீதி வழங்குவார்;

அவர்களோ தங்கள் வாள்களைக்

கலப்பைக் கொழுக்களாகவும்

தங்கள் ஈட்டிகளைக்

கருக்கரிவாள்களாகவும்

அடித்துக் கொள்வார்கள்;

ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம்

வாள் எடுக்காது;

அவர்கள் இனி ஒருபோதும்

போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்.

4அவர்களுள் ஒவ்வொருவரும்

தம் திராட்சைத் தோட்டத்தின் நடுவிலும்,

அத்தி மரத்தின் அடியிலும்

அமர்ந்திருப்பர்;

அவர்களை அச்சுறுத்துவார்

எவருமில்லை;

ஏனெனில்,

படைகளின் ஆண்டவரது

திருவாய் இதை மொழிந்தது.

5மக்களினங்கள் யாவும்

தம் தெய்வத்தின் பெயரை வழிபடும்.

நாமோ, நம் கடவுளாகிய

ஆண்டவரின் பெயருக்கு

என்றென்றும் பணிந்திருப்போம்.

6அந்நாளில், “நான்

முடமாக்கப்பட்டோரை ஒன்று சேர்ப்பேன்;

விரட்டியடிக்கப்பட்டோரையும்

என்னால் தண்டிக்கப்பட்டோரையும்

ஒன்றுகூட்டுவேன்”

என்கிறார் ஆண்டவர்.

7முடமாக்கப்பட்டோரை

எஞ்சியோராய் ஆக்குவேன்;

விரட்டியடிக்கப்பட்டோரை

வலியதோர் இனமாக உருவாக்குவேன்;

அன்றுமுதல் என்றென்றும்

ஆண்டவராகிய நானே

சீயோன் மலைமேலிருந்து

அவர்கள்மேல் ஆட்சிபுரிவேன்.

8மந்தையின் காவல் மாடமே!

மகள் சீயோனின் குன்றே!

முன்னைய அரசுரிமை

உன்னை வந்துசேரும்;

மகள் எருசலேமின் அரசு

உன்னை வந்தடையும்.

9இப்போது நீ கூக்குரலிட்டுக்

கதறுவானேன்?

பேறுகாலப் பெண்ணைப்போல்

ஏன் வேதனைப்படுகின்றாய்?

அரசன் உன்னிடத்தில்

இல்லாமற் போனானோ?

உனக்கு அறிவு புகட்டுபவன்

அழிந்தொழிந்தானோ?

10மகளே சீயோன்!

பேறுகாலப் பெண்ணைப்போல

நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு;

ஏனெனில், இப்பொழுதே

நீ நகரைவிட்டு வெளியேறுவாய்;

வயல்வெளிகளில் குடியிருப்பாய்;

பாபிலோனுக்குப் போவாய்;

அங்கிருந்து நீ விடுவிக்கப்படுவாய்;

உன் பகைவர் கையினின்றும்

ஆண்டவர் உன்னை மீட்டருள்வார்.

11இப்பொழுது, வேற்றினத்தார் பலர்

உனக்கு எதிராய்

ஒன்று கூடியிருக்கின்றார்கள்;

‘சீயோன் தீட்டுப்படட்டும்;

அதன் வீழ்ச்சியை

நம் கண்கள் காணட்டும்’

என்று சொல்லுகின்றார்கள்.

12ஆனால் அவர்கள் ஆண்டவரின்

எண்ணங்களை அறியவில்லை.

அவரது திட்டத்தையும்

புரிந்து கொள்ளவில்லை.

ஏனெனில் புணையடிக்கும் களத்தில்

அரிக்கட்டுகளைச் சேர்ப்பதுபோல்

அவர் அவர்களைச்

சேர்த்து வைத்திருக்கின்றார்.

13மகள் சீயோனே, நீ எழுந்து புணையடி;

நான் உன் கொம்பை இரும்பாக மாற்றுவேன்;

உன்னுடைய குளம்புகளை

வெண்கலம் ஆக்குவேன்;

மக்களினங்கள் பலவற்றை

நீ நொறுக்கிப்போடுவாய்;

அவர்களிடம் கொள்ளையடித்தவற்றை

ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாய்;

அவர்களது செல்வங்களை

அனைத்துலகின் ஆண்டவரிடம்

ஒப்படைப்பாய்.”


4:3 யோவே 3:10.
4:4 செக் 3:10.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks