back to top
HomeTamilமீக்கா அதிகாரம் - 2 - திருவிவிலியம்

மீக்கா அதிகாரம் – 2 – திருவிவிலியம்

மீக்கா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

எளியோரை ஒடுக்குவோருக்கு வரும் தண்டனை

1தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து

தீச்செயல் புரியத் திட்டமிட்டுக்

கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு

ஐயோ கேடு!

பொழுது புலர்ந்தவுடன்

தங்கள் கைவலிமையினால்

அவர்கள் அதைச்

செய்து முடிக்கின்றார்கள்.

2வயல் வெளிகள்மீது ஆசை கொண்டு,

அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்;

வீடுகள்மேல் இச்சை கொண்டு

அவற்றைக்

கைப்பற்றிக் கொள்கின்றார்கள்;

ஆண்களை ஒடுக்கி,

அவர்கள் வீட்டையும்

உரிமைச் சொத்தையும்

பறிமுதல் செய்கின்றார்கள்.

3ஆதலால், ஆண்டவர் கூறுவது இதுவே:

“இந்த இனத்தாருக்கு எதிராகத்

தீமை செய்யத் திட்டமிடுகிறேன்;

அதனினின்று

உங்கள் தலையை விடுவிக்க

உங்களால் இயலாது;

நீங்கள் ஆணவம் கொண்டு

நடக்கமாட்டீர்கள்;

ஏனெனில், காலம் தீயதாய் இருக்கும்.

4அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி

இரங்கற்பா இயற்றி,

‘அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே;

ஆண்டவருடைய மக்களின்

உரிமைச்சொத்து கைமாறிவிட்டதே!

நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக்

கொள்ளைக்காரர்களுக்குப்

பகிர்ந்தளிக்கின்றாரே!’ என்று

ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.

5ஆதலால், நூல்பிடித்துப்

பாகம் பிரித்து

உங்களுக்குத் தருபவன் எவனும்

ஆண்டவரின் சபையில் இரான்.

6அவர்கள் பிதற்றுவது:

‘சொற்பொழிவுகளை நிறுத்துங்கள்;

அவற்றைக் குறித்துப் பேசவேண்டாம்;

மானக்கேடு நம்மை அணுகாது.

7யாக்கோபின் குடும்பத்தாரே,

ஆண்டவர் பொறுமையிழந்து விட்டாரோ?

இவற்றைச் செய்பவர் அவர்தாமோ?

நேர்மையாய் நடப்போரிடம்

அவர் பரிவுடன் பேசமாட்டாரோ?’

8ஆனால், நீங்கள்தாம் என் மக்களைப்

பகைவரைப்போல் தாக்குகின்றீர்கள்!

போரில் நாட்டம் கொள்ளாமல்,

அமைதியை நாடுவோரின்

மேலாடையைப் பறிக்கின்றீர்கள்;

இதனால், அவர்களின்

மன அமைதியைக் கெடுக்கின்றீர்கள்;

9என் மக்களின் கூட்டத்திலுள்ள

பெண்களை

அவர்களுடைய அழகிய வீடுகளிலிருந்து

விரட்டுகின்றீர்கள்;

அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளிடம்

என் மாட்சி என்றும் விளங்காதவாறு

செய்துவிடுகின்றீர்கள்.

10எழுந்து அகன்றுபோங்கள்;

இது இளைப்பாறும் இடம் அல்ல;

நாட்டில் தீட்டு ஏற்பட்டுவிட்டது;

அது அழிவைக் கொண்டுவரும்.

அது மிகக்கொடிய பேரழிவாய் இருக்கும்.

11‘திராட்சை இரசத்தையும்

மதுவையும்பற்றி

உங்களுக்கு உரையாற்றுவேன்’

என்று கூறி,

வீண் சொற்களையும்

பொய்களையும் பிதற்றுகிறவன்தான்

இம்மக்களுக்கு ஏற்ற உரையாளன்!

12யாக்கோபே!

நான் உங்கள் அனைவரையும்

ஒன்றாகக் கூட்டுவேன்;

இஸ்ரயேலில் எஞ்சியோரை

ஒன்றாகத் திரட்டுவேன்;

இரைச்சலிடும் அந்தக் கூட்டத்தை

ஆடுகளைக் கிடையில்

மடக்குவது போலவும்;

மந்தையை மேய்ச்சல் நிலத்தில்

வளைப்பது போலவும்

ஒன்றாகச் சேர்ப்பேன்.

13அவர்களின் வழிகாட்டிகள்

தடைகளைத் தகர்த்தெறிந்து

வெளியேறுவார்கள்;

அவர்களின் அரசர்

அவர்களுக்கு முன்னால்

கடந்து செல்வார்;

ஆண்டவரே அவர்களை

வழிநடத்திப் போவார்.”

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks