back to top
HomeTamilசெக்கரியா அதிகாரம் - 10 - திருவிவிலியம்

செக்கரியா அதிகாரம் – 10 – திருவிவிலியம்

செக்கரியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

விடுதலைக்கான ஆண்டவரின் வாக்குறுதி

1இளவேனில் காலத்தில் மழைக்காக

ஆண்டவரிடம் மன்றாடுங்கள்;

ஆண்டவரே

மின்னல்களை உண்டாக்குபவர்;

மனிதர்க்கு அவரே மழையைத் தருபவர்;

வயல்வெளிகளில் பயிரினங்களை

முளைப்பிப்பவரும் அவரே;

2குலதெய்வங்கள்

வீணானதையே கூறுகின்றன;

குறிசொல்வோர்

பொய்க்காட்சி காண்கின்றனர்;

அவர்கள் போலிக் கனவுகளை

எடுத்துரைக்கின்றனர்;

வெறுமையான ஆறுதல் மொழிகளைச்

சொல்கின்றனர்;

ஆதலால், மக்கள் ஆடுகளைப்போல்

சிதறுண்டு அலைந்தனர்;

ஆயரில்லாததால் துன்புறுகின்றனர்.

3ஆயர்களுக்கு எதிராக

என் கோபம் பற்றியெரிகின்றது;

தலைவர்களை நான்

தண்டிக்கப் போகின்றேன்;

ஏனெனில், படைகளின் ஆண்டவர்

தம் மந்தையாகிய யூதா குடும்பத்தாரைக்

கண்காணிக்கிறார்;

அவர்களை, வலிமைமிகு

போர்க் குதிரைகளைப்போல் ஆக்குவார்.

4அவர்களிடமிருந்தே

மூலைக் கல் தோன்றும்;

கூடார முளையும், போர்வில்லும்,

ஆட்சியாளர் அனைவரும் ஒருங்கே

அவர்களிடமிருந்துதான் தோன்றுவர்.

5அவர்கள், ஆற்றல்மிக்க

போர்வீரர்களைப்போல்,

பகைவரைச் சேற்றில் தள்ளி

மிதிப்பார்கள்.

6“யூதா குடும்பத்தை

ஆற்றல் மிக்கதாய் ஆக்குவேன்;

யோசேப்பு குடும்பத்தை மீட்டருள்வேன்;

அவர்கள்மீது

இரக்கம் கொண்டுள்ளதால்

அவர்களை நான்

திரும்பி வரச்செய்வேன்;

அவர்கள் என்னால்

தள்ளிவிடப்படாதவர்களைப் போல்

இருப்பார்கள்;

ஏனெனில், நானே அவர்களுடைய

கடவுளாகிய ஆண்டவர்;

நான் அவர்களின் மன்றாட்டுக்கு

மறுமொழி அளிப்பேன்.

7எப்ராயிம் மக்கள்

ஆற்றல்மிக்க வீரரைப்போலாவார்கள்;

திராட்சை மது அருந்தியவரின்

உள்ளத்தைப்போல்

அவர்கள் உள்ளம் களிப்படையும்;

அவர்கள் பிள்ளைகளும்

அதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள்;

ஆண்டவரில் அவர்கள் இதயம்

மகிழ்ந்து களிப்புறும்.

8சீழ்க்கை ஒலி எழுப்பி

நான் அவர்களைச்

சேர்த்துக் கொள்வேன்;

ஏனெனில் நானே அவர்களை

மீட்டருள்வேன்;

முன்போலவே அவர்கள்

பல்கிப் பெருகுவார்கள்.

9மக்களினங்களிடையே

நான் அவர்களைச் சிதறடித்தாலும்,

தொலை நாடுகளில்

என்னை அவர்கள்

நினைத்துக் கொள்வார்கள்;

தங்கள் மக்களோடு வாழ்ந்து

திரும்பி வருவார்கள்.

10நான் அவர்களை எகிப்து நாட்டினின்று

திரும்பிவரச் செய்வேன்;

அசீரியாவிலிருந்து அவர்களைக்

கூட்டிக்கொண்டு வருவேன்;

கிலயாது, லெபனோன் நாடுகளுக்கு

அவர்களைக் கொண்டு வருவேன்;

இடம் இல்லாமல் போகுமட்டும்

வந்து சேருவார்கள்.

11எகிப்தியக் கடலை அவர்கள்

கடந்து செல்வார்கள்;

கடல் அலைகள்

அடித்து நொறுக்கப்படும்;

பேராற்றின் ஆழங்களெல்லாம்

வறண்டுபோகும்;

அசீரியாவின் ஆணவம் அடக்கப்படும்;

எகிப்து நாட்டின் செங்கோல்

அகற்றப்படும்.

12ஆண்டவருக்குள் அவர்களை

ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்;

ஆண்டவரின் பெயரில்

அவர்கள் பெருமைகொள்வார்கள்,”

என்கிறார் ஆண்டவர்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks