back to top
HomeTamilஇனிமைமிகு பாடல் அதிகாரம் - 5 - திருவிவிலியம்

இனிமைமிகு பாடல் அதிகாரம் – 5 – திருவிவிலியம்

இனிமைமிகு பாடல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1என் தோட்டத்திற்கு நான்

வந்துள்ளேன்;

என் தங்காய், மணமகளே,

என் வெள்ளைப்போளத்தையும்

நறுமணப் பொருளையும்

சேகரிக்கின்றேன்;

என் தேனையும் தேனடைகளையும்

உண்கின்றேன்;

என் திராட்சை இரசத்தையும்

பாலையும் பருகுகின்றேன்;

தோழர்களே, உண்ணுங்கள்;

அன்பர்களே, போதையேறப் பருகுங்கள்.

பாடல் 17: தலைவி கூற்று

2நான் உறங்கினேன்;

என் நெஞ்சமோ விழித்திருந்தது;

இதோ, என் காதலர்

கதவைத் தட்டுகின்றார்;

“கதவைத் திற, என் தங்காய்,

என் அன்பே, என் வெண்புறாவே,

நிறை அழகே,

என் தலை பனியால் நனைந்துள்ளது;

என் தலைமயிர்ச் சுருள்

இரவுத் தூறலால் ஈரமானது.

3“என் ஆடையைக் களைந்து விட்டேன்;

மீண்டும் அதனை நான்

உடுத்த வேண்டுமோ?

என் கால்களைக் கழுவியுள்ளேன்;

மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?”

4என் காதலர் கதவுத் துளை வழியாகக்

கையைவிட்டார்;

என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.

5எழுந்தேன் நான்,

காதலர்க்குக் கதவு திறக்க;

என் கையில்

வெள்ளைப்போளம் வடிந்தது;

என் விரல்களில்

வெள்ளைப்போளம் சிந்திற்று;

தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று.

6கதவைத் திறந்தேன் நான்

என் காதலர்க்கு;

அந்தோ! என் காதலர் காணவில்லை,

போய்விட்டார்; என் நெஞ்சம்

அவர் குரலைத் தொடர்ந்து போனது;

அவரைத் தேடினேன்;

அவரைக் கண்டேன் அல்லேன்;

அவரை அழைத்தேன்; பதிலே இல்லை!

7ஆனால் என்னைக் கண்டனர்

சாமக் காவலர்;

அவர்கள் என்னை அடித்தனர்;

காயப்படுதினர்;

என் மேலாடையைப்

பறித்துக் கொண்டனர்;

கோட்டைச் சுவரின்

காவலர்கள் அவர்கள்!

8எருசலேம் மங்கையரே,

ஆணையிட்டுச் சொல்கிறேன்;

என் காதலரைக் காண்பீர்களாயின்

அவரிடம் என்ன சொல்வீர்கள்?

“காதல் நோயுற்றேன் நான்”

எனச் சொல்லுங்கள்.

9“பெண்களுக்குள் பேரழகியே,

மற்றக் காதலரினும் உன் காதலர்

எவ்வகையில் சிறந்தவர்?

இவ்வாறு எங்களிடம்

ஆணையிட்டுக் கூறுகின்றாயே;

மற்றக் காதலரினும் உன்காதலர்

எவ்வகையில் சிறந்தவர்?”

10“என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்;

பல்லாயிரம் பேர்களிலும்

தனித்துத் தோன்றுவார்!

11அவரது தலை பசும்பொன்;

தலை முடி சுருள் சுருளாய் உள்ளது;

காகம்போல் கருமை மிக்கது.

12அவர் கண்கள்

வெண்புறாக்கள் போன்றவை;

பாலில் குளித்து,

நீரோடைகளின் அருகில்

கரையோரங்களில் தங்கும்

வெண்புறாக்கள் அவை.

13அவர் கன்னங்கள் நறுமண

நாற்றங்கால்கள் போல்வன;

நறுமணம் ஆங்கே கமழ்கின்றது;

அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்;

அவற்றினின்று வெள்ளைப்போளம்

சொட்டுச்சொட்டாய் வடிகின்றது.

14அவருடைய கைகள்

உருண்ட பொன் தண்டுகள்; அவற்றில்

மாணிக்கக் கற்கள் பதிந்துள்ளன;

அவரது வயிறு

யானைத் தந்தத்தின் வேலைப்பாடு;

அதில் நீலமணிகள்

பொதியப் பெற்றுள்ளன.

15அவருடைய கால்கள்

பளிங்குத் தூண்கள்;

தங்கத் தளத்திலே

அவை பொருந்தியுள்ளன;

அவரது தோற்றம்

லெபனோனுக்கு இணையானது;

கேதுரு மரங்கள்போல் தலைசிறந்தது.

16அவரது வாய் இணையற்ற இனிமை;

அவர் முழுமையும் பேருவகையே;

எருசலேம் மங்கைய

இவரே என் நண்பர்.”

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks