back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 9 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 9 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

பெண்கள்

1உன் காதல் மனையாளைப்

பார்த்துப் பொறாமைப்படாதே;

உனக்கே தீங்கு விளைவிக்கும்

தீய பழக்கங்களை அவளுக்குச்

சொல்லிக்கொடாதே.

2ஒரு பெண்ணுக்கு நீ அடிமையாகாதே;

இல்லையேல், அவள்

உன்னையே அடக்கியாள நேரிடும்.

3நெறிகெட்டவளை அணுகிச் செல்லாதே;

அவளது வலைக்குள் வீழ்ந்திடுவாய்.

4பாடகியுடன் உனக்குத்

தொடர்பு வேண்டாம்.

அவளது மயக்கும்

வலையில் சிக்கிக்கொள்வாய்.

5கன்னிப்பெண்ணை

உற்று நோக்காதே;

நீ தடுமாறி அவளால்

தண்டனைக்கு ஆளாவாய்.

6விலைமாதரிடம் உன் உள்ளத்தைப்

பறிகொடாதே;

உன் உரிமைச் சொத்தை

நீ இழக்க நேரிடும்.

7நகரின் தெருக்களில்

அங்குமிங்கும் பராக்குப் பார்க்காதே;

ஆள்நடமாட்டமற்ற இடங்களில்

சுற்றித்திரியாதே.

8அழகான பெண்ணிடமிருந்து

உன் கண்களைத் திருப்பிக்கொள்;

பிறன் மனைவியின் அழகை

உற்றுநோக்காதே.

பெண்களின் அழகால்

பலர் நெறி பிறழ்ந்துள்ளனர்;

இதனால் காமம் தீயெனப் பற்றியெரியும்.

9அடுத்தவருடைய மனைவியுடன்

அமர்ந்து விருந்துண்ணாதே;

அவளுடன் மது அருந்திக் களிக்காதே;

உன் மனம் அவளிடம் மயங்கிவிடும்;

முடிவில் உன் வாழ்வே வீழ்ச்சியுறும்.

மற்றவர்களுடன் உறவு

10உன் பழைய நண்பர்களைக்

கைவிடாதே;

புதிய நண்பர்கள் அவர்களுக்கு

இணையாகமாட்டார்கள்;

புதிய நண்பர்கள் புதிய மதுவைப்

போன்றவர்கள்.

நாள் ஆக ஆகத்தான்

அதை நீ சுவைத்துக் களிப்பாய்.

11பாவிகளின் பெருமை கண்டு

பொறாமை கொள்ளாதே;

அவர்களுக்கு வரவிருக்கும்

கேடு உனக்குத் தெரியாது.

12இறைப்பற்றில்லாதவர்களுக்குப்

பிடித்தமானவற்றில் இன்பம்

கொள்ளாதே;

அவர்கள் தங்கள்

வாழ்நாளிலேயே தண்டனை

பெறுவார்கள் என்பதை

நினைவில் இருத்து.

13கொலை செய்ய அதிகாரம்

கொண்டவர்களை விட்டுத்

தொலைவில் இரு;

அப்பொழுது சாவுபற்றிய

அச்சத்தால் நீ

அலைக்கழிக்கப்படமாட்டாய்;

அவர்களிடம் நீ சென்றால்

தவறு ஏதும் செய்யாதே;

செய்தால் உன் உயிரை

அவர்கள் வாங்கிவிடுவார்கள்.

கண்ணிகள் நடுவே நீ நடக்கிறாய்

என்றும் நகரின் கோட்டை

கொத்தளங்களூடே செல்கிறாய்

என்றும் அறிந்துகொள்.

14அடுத்திருப்பவரை அறிய

முடிந்தவரை முயற்சி செய்;

ஞானிகளைக் கலந்து

ஆலோசனை செய்.

15அறிவுக்கூர்மை படைத்தவர்களோடு

உரையாடு;

உன் பேச்செல்லாம் உன்னத

இறைவனின் திருச்சட்டம்

பற்றி அமையட்டும்.

16நீதிமான்கள் உன்னுடன்

விருந்தாடட்டும்;

ஆண்டவரிடம் கொள்ளும்

அச்சமே உனது

பெருமையாக இருக்கட்டும்.

17கைவினைஞரின் திறமையைக்

கொண்டே பொருள்கள்

மதிப்புப் பெறுகின்றன;

மக்கள் தலைவர் தம்

பேச்சைக் கொண்டே

ஞானியாய் மதிக்கப்படுகிறார்.

18வாயாடியைக் கண்டு அவர்களின்

நகரத்தார் அஞ்சுவர்;

உளறு வாயரை ஊரார் வெறுப்பர்.


9:3 நீமொ 7:10-23.
9:5 இச 22:28-29.
9:8 2 சாமு 11:2-4; மத் 5:28.
9:10 நீமொ 27:10.
9:12 நீமொ 11:21.
9:14 தோபி 4:18.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks