back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 8 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 8 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

பொது அறிவு

1வலியவரோடு வழக்காடாதே;

அவர்கள் கையில்

சிக்கிக்கொள்ள நேரிடும்.

2செல்வருடன் சண்டையிடாதே;

உன்னைவிட அவர்கள்

வசதிமிக்கவர்கள்.

பொன்னாசை பலரை

அழித்திருக்கிறது;

மன்னர்களின் மனத்தையும்

கெடுத்திருக்கிறது.

3வாயாடிகளோடு வாதிடாதே;

எரியும் நெருப்பில்

எண்ணெய் வார்க்காதே.

4பண்பற்றோரிடம் நகையாடாதே;

உன் முன்னோரை

அவர்கள் பழித்துரைக்கலாம்.

5பாவத்தினின்று

மனந்திரும்புவோரைப் பழிக்காதே;

நாம் எல்லாருமே தண்டனைக்கு

உரியவர்கள் என்பதை

நினைத்துக் கொள்.

6முதியோர் எவரையும் இகழாதே;

நம்முள் சிலரும் முதுமை

அடைந்து வருகிறோம்.

7இறந்தோரைக் கண்டு மகிழாதே;

நாம் எல்லாருமே சாக வேண்டும்

என்பதை நினைவில் கொள்.

8ஞானிகளுடைய அறிவுரைகளைப்

புறக்கணியாதே;

அவர்களுடைய

பொன்மொழிகளைக் கற்றுணர்.

அவற்றால் நற்பயிற்சி பெறுவாய்;

பெரியார்களுக்குப் பணி செய்யக்

கற்றுக்கொள்வாய்.

9முதியோரின் உரைகளைப்

புறக்கணியாதே;

அவர்களும் தங்கள்

முன்னோரிடமிருந்தே

கற்றுக்கொண்டார்கள்;

அவர்களிடமிருந்து நீயும்

அறிவுக் கூர்மை பெறுவாய்;

தகுந்த நேரத்தில் தக்க

விடை கூற அறிந்துகொள்வாய்.

10பாவிகளது தீய நாட்டத்தைத்

தூண்டிவிடாதே;

அது உன்னைப் பொசுக்கிவிடும்.

11இறுமாப்புக் கொண்டோருடன்

மோதாதே; மோதினால்,

உன் சொற்களைக் கொண்டே

உன்மீது குற்றம் சாட்டுவர்.

12உன்னிலும் வலியோருக்குக்

கடன்கொடாதே;

கொடுத்தால்,

அதை இழந்து

விட்டதாக எண்ணிக்கொள்.

13உன் உடைமைக்கு மிஞ்சிப்

பிணையம் ஆகாதே;

பிணையமானால், பணம் செலுத்த

ஆயத்தமாய் இரு.

14நடுவருக்கே எதிராக

வழக்குத் தொடுக்காதே;

அவரது பெருமையை முன்னிட்டு

அவர் சார்பாகவே தீர்ப்பு

வழங்கப்படும்.

15தறுதலைகளோடு பயணம் செய்யாதே;

அவர்கள் உனக்குச்

சுமையாய் இருப்பார்கள்;

தங்களது விருப்பம் போல

நடப்பார்கள்;

அவர்களது அறிவின்மையால்

நீயும் அவர்களோடு அழிய நேரிடும்.

16முன்கோபிகளுடன் சண்டையிடாதே;

அவர்களுடன் ஆளில்லாத்

தனியிடத்திற்குச் செல்லாதே.

கொலை செய்யவும்

அவர்கள் அஞ்சுவதில்லை;

உனக்கு உதவி இல்லாத

இடத்தில் உன்னைத்

தாக்கி வீழ்த்துவார்கள்.

17அறிவிலிகளோடு கலந்தாராயாதே;

அவர்களால் இரகசியங்களைக்

காப்பாற்ற முடியாது.

18மறைக்க வேண்டியவற்றை

அன்னியர் முன் செய்யாதே;

அவர்கள் எதை வெளியிடுவார்கள்

என உனக்குத் தெரியாது.

19திறந்த உள்ளத்துடன்

எல்லாரிடமும் பேசாதே;

அவர்கள் உனக்கு நன்றி

உள்ளவர்களாய் இருக்கமாட்டார்கள்.


8:6 லேவி 19:32.
8:9 கொலோ 4:6.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks