back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 49 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 49 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

யோசியா

1யோசியாவின் நினைவு,

நறுமணப் பொருள்

தயாரிப்பவரால் செய்யப்பட்ட

தூபக் கலவைபோன்றது;

எல்லாருடைய வாயிலும்

தேனைப்போலும், திராட்சை

இரசம் பரிமாறப்படும் விருந்தின்

இன்னிசைபோலும் இனியது.

2மக்களைச் சீர்படுத்துவதில்

நேர்மையாக நடந்துகொண்டார்;

தீநெறியின் அருவருப்பை நீக்கினார்.

3ஆண்டவரிடம் தம் உள்ளத்தைச்

செலுத்தினார்; தீநெறியாளர்களின்

காலத்தில் வாழ்ந்த இறைப்

பற்றுள்ளோரை உறுதிப்படுத்தினார்.

எரேமியா

4தாவீது, எசேக்கியா, யோசியா,

ஆகியோரைத்தவிர மற்ற அனைவரும்

பாவத்திற்குமேல் பாவம் செய்தனர்.

ஏனெனில் உன்னத இறைவனின்

திருச்சட்டத்தைக் கைவிட்டனர்;

யூதாவின் மன்னர்களும்

மறைந்துபோயினர்.

5அவர்கள் தங்களுடைய வலிமையைப்

பிறருக்கு விட்டுக்கொடுத்தார்கள்;

தங்களுடைய மாட்சியை அயல்

நாட்டாருக்குக் கையளித்தார்கள்.

6திருவிடம் அமைந்திருந்த

தெரிந்தெடுக்கப்பட்ட நகரை

அவர்கள் தீக்கிரையாக்கினார்கள்;

எரேமியா கூறியபடி அதன்

தெருக்களைப் பாழாக்கினார்கள்.

7தாயின் வயிற்றிலேயே

இறைவாக்கினராகத்

திருநிலைப்படுத்தப்பெற்று,

பிடுங்கவும் துன்புறுத்தவும்

இடிக்கவுமின்றி, கட்டியெழுப்பவும்

நட்டுவைக்கவும் ஏற்படுத்தப்

பெற்ற எரேமியாவை அவர்கள்

கொடுமையாய் நடத்தினார்கள்.

எசேக்கியேல்

8எசேக்கியேல் கடவுளுடைய

மாட்சியின் காட்சியைக் கண்டார்;

கெருபுகள் தாங்கின தேரின்மேல்

மிளிர்ந்த அம்மாட்சியை ஆண்டவர்

அவருக்குக் காட்டினார்.

9பகைவர்களை நினைவுகூர்ந்து

புயலை அனுப்பினார்;

நேரிய வழியில் நடந்தோருக்கு

நலன்கள் புரிந்தார்.

பன்னிரண்டு இறைவாக்கினர்

10பன்னிரண்டு இறைவாக்கினர்களின்

எலும்புகள் அவர்களது

கல்லறையிலிருந்து புத்துயிர் பெற்றெழுக.

அவர்கள் யாக்கோபின்

குலத்தாரைத் தேற்றினார்கள்;

பற்றுறுதி கொண்ட நம்பிக்கையால்

அவர்களை விடுவித்தார்கள்.

செருபாபேல், யோசுவா

11செருபாபேலை எவ்வாறு நாம்

மேன்மைப்படுத்துவோம்?

வலக்கையின் கணையாழிபோல்

அவர் திகழ்ந்தார்.

12அவரைப்போலவே யோசதாக்கின்

மகன் யோசுவாவும் விளங்கினார்.

அவர்கள் தங்கள் காலத்தில்

ஆண்டவரின் இல்லத்தைக்

கட்டினார்கள்; என்றுமுள

மாட்சிக்கென

நிறுவப்பட்ட திருக்கோவிலை

ஆண்டவருக்கு எழுப்பினார்கள்.

நெகேமியா

13நெகேமியாவின் நினைவும்

பெருமைக்குரியது.

இடிந்து விழுந்த மதில்களை

அவர் நமக்காக எழுப்பினார்;

கதவுகளையும் தாழ்ப்பாள்களையும்

பொருத்தினார்; நம் இல்லங்களை

மீண்டும் கட்டினார்.

குலமுதல்வர்கள்

14ஏனோக்குபோன்ற எவரும்

மண்ணுலகின்மீது

படைக்கப்படவில்லை. அவர்

நிலத்திலிருந்து மேலே

எடுத்துக் கொள்ளப்பெற்றார்.

15யோசேப்பைப் போன்றவர்

எவரும் பிறந்ததில்லை;

அவர் சகோதரர்களின்

தலைவராகவும் மக்களின்

ஊன்றுகோலாகவும் திகழ்ந்தார்.

அவருடைய எலும்புகளும்

காக்கப்பட்டன.

16சேம், சேத்து ஆகியோர்

மனிதருக்குள்

மாட்சிமைப்படுத்தப்பெற்றனர்.

படைக்கப்பட்ட

எல்லா உயிரினங்களுள்ளும்

ஆதாம் சிறந்து விளங்குகிறார்.


49:1-3 2 அர 22:1-2, 11-13; 23:3-25; 2 குறி 34:14.
49:6-7 எரே 1:4-10; 37:21.
49:8-9 எசே 1:3-28; 14:14-20.
49:11 ஆகா 2:23; எஸ்ரா 3:2.
49:12 ஆகா 1:1; 12:15.
49:13 நெகே 2:11-4:15; 6:1-5.
49:14 சாஞா 4:10-14; தொநூ 5:24.
49:15 தொநூ 37:1-50:26.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks