back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 2 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 2 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

ஆண்டவரிடம் பற்றுறுதி

1குழந்தாய், ஆண்டவருக்குப்

பணிபுரிய நீ முன்வந்தால்,

சோதனைகளை எதிர்கொள்ள

முன்னேற்பாடு செய்துகொள்.

2உள்ளத்தில்

உண்மையுள்ளவனாய் இரு;

உறுதியாக இரு;

துன்ப வேளையில்

பதற்றமுடன் செயலாற்றாதே.

3ஆண்டவரைச் சிக்கெனப்

பிடித்துக்கொள்;

அவரை விட்டு விலகிச் செல்லாதே.

உன் வாழ்க்கையின் முடிவில்

வளமை அடைவாய்.

4என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்;

இழிவுவரும்போது

பொறுமையாய் இரு.

5நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது;

ஏற்புடைய மனிதர் மானக்கேடு

எனும் உலையில்

சோதித்துப் பார்க்கப்படுகின்றனர்.

6ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்;

அவர் உனக்குத் துணை செய்வார்.

உன் வழிகளைச் சீர்படுத்து;

அவரிடம் நம்பிக்கை கொள்.

7ஆண்டவருக்கு அஞ்சுவோரே.

அவரிடம் இரக்கத்துக்காகக்

காத்திருங்கள்;

நெறி பிறழாதீர்கள்;

பிறழ்ந்தால் வீழ்ச்சி அடைவீர்கள்.

8ஆண்டவருக்கு அஞ்சுவோரே,

அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்;

உங்களுக்குக் கைம்மாறு

கிடைக்காமற் போகாது.

9ஆண்டவருக்கு அஞ்சுவோரே,

நல்லவைமீது நம்பிக்கை

கொள்ளுங்கள்;

நிலையான மகிழ்ச்சியையும்

இரக்கத்தையும் எதிர்நோக்கியிருங்கள்.

10முந்திய தலைமுறைகளை

எண்ணிப்பாருங்கள்.

ஆண்டவரிடம் பற்றுறுதி

கொண்டிருந்தோருள்

ஏமாற்றம் அடைந்தவர் யார்?

அவருக்கு அஞ்சி நடந்தோருள்

கைவிடப்பட்டவர் யார்?

அவரை மன்றாடினோருள்

புறக்கணிக்கப்பட்டவர் யார்?

11ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்;

பாவங்களை மன்னிப்பவர்;

துன்ப வேளையில் காப்பாற்றுகிறவர்.

12கோழை நெஞ்சத்தவருக்கும்

ஆற்றலற்ற கையருக்கும்

இரட்டை வேடமிடும்

பாவிகளுக்கும்

ஐயோ, கேடு வரும்!

13உறுதியற்ற உள்ளத்தவருக்கும்

ஐயோ, கேடு வரும்!

ஏனெனில் அவர்கள்

பற்றுறுதி கொள்ளவில்லை;

எனவே அவர்களுக்குப்

பாதுகாப்பு இராது.

14தளர்ச்சி அடைந்தோரே,

உங்களுக்கும் ஐயோ, கேடு வரும்!

ஆண்டவர் உங்களைச் சந்திக்க

வரும்போது என்ன செய்வீர்கள்?

15ஆண்டவருக்கு அஞ்சுவோர்

அவருடைய சொற்களைக்

கடைப்பிடிப்பர்;

அவர்மீது அன்புசெலுத்துவோர்

அவர்தம் வழிகளைப் பின்பற்றுவர்.

16ஆண்டவருக்கு அஞ்சுவோர்

அவர்தம் விருப்பத்தையே தேடுவர்;

அவரிடம் அன்பு பாராட்டுவோர்

அவர்தம் திருச்சட்டத்தில்

நிறைவு அடைவர்.

17ஆண்டவருக்கு அஞ்சுவோர்

முன்னேற்பாடாய் இருப்பர்;

அவர் திருமுன் தங்களைத்

தாழ்த்திக் கொள்வர்.

18‘ஆண்டவரின் கைகளில்

நாம் விழுவோம்;

மனிதரின் கைகளில்

விழமாட்டோம்; ஏனெனில்

அவரது பெருமையைப் போன்று

அவர்தம் இரக்கமும் சிறந்தது’

என அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.


2:5 சாஞா 3:6; 1 பேது 1:7.
2:6 திபா 37:3,5.
2:10 திபா 37:25.
2:16 திபா 119:97, 103.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks