back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 86 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 86 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

உதவிக்காக வேண்டல்
(தாவீதின் மன்றாட்டு)

1ஆண்டவரே! எனக்குச்

செவிசாய்த்துப் பதிலளியும்;

ஏனெனில், நான் எளியவன்; வறியவன்.

2என் உயிரைக் காத்தருளும்;

ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்;

உம் ஊழியனைக் காத்தருளும்;

நீரே என் கடவுள்! நான் உம்மீது

நம்பிக்கை கொண்டுள்ளேன்.

3என் தலைவரே! என் மேல் இரக்கமாயிரும்;

ஏனெனில், நான் முழுவதும்

உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

4உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்;

என் தலைவரே! உம்மை நோக்கி

என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.

5ஏனெனில் என் தலைவரே!

நீர் நல்லவர்; மன்னிப்பவர்;

உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும்

பேரன்பு காட்டுபவர்.

6ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச்

செவிகொடும்;

உம் உதவியை நாடும்

என் குரலைக் கேட்டருளும்.

7என் துன்ப நாளில்

உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;

நீரும் எனக்குப் பதிலளிப்பீர்.

8என் தலைவரே! தெய்வங்களுள்

உமக்கு நிகரானவர் எவருமில்லை.

உமது செயல்களுக்கு ஒப்பானவை

எவையுமில்லை.

9என் தலைவரே! நீர் படைத்த

மக்களினத்தார் அனைவரும்

உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்;

உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.

10ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்;

வியத்தகு செயல்கள் புரிபவர்;

நீர் ஒருவரே கடவுள்!

11ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப

நான் நடக்குமாறு

உமது வழியை எனக்குக் கற்பியும்,

உமது பெயருக்கு அஞ்சுமாறு

என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்.

12என் தலைவரே! என் கடவுளே!

என் முழு இதயத்தோடு

உம்மைப் புகழ்வேன்;

என்றென்றும் உமது பெயருக்கு
மாட்சி அளிப்பேன்.

13ஏனெனில், நீர் என்மீது காட்டிய

அன்பு பெரிது!

ஆழமிகு பாதாளத்தினின்று

என்னுயிரை விடுவித்தீர்!

14கடவுளே! செருக்குற்றோர்

எனக்கெதிராய் எழுந்துள்ளனர்;

கொடியோர் கூட்டம்

என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது;

அவர்களுக்கு உம்மைப்பற்றிய

நினைவே இல்லை.

15என் தலைவரே!

நீரோ இரக்கமிகு இறைவன்;

அருள் மிகுந்தவர்;

விரைவில் சினமுறாதவர்;

பேரன்பும் உண்மையும்

பெரிதும் கொண்டவர்.

16என்னைக் கண்ணோக்கி

என்மீது இரங்கும்;

உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்;

உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்.

17நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை

எனக்கு அருளும்;

என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்;

ஏனெனில், ஆண்டவராகிய நீர்தாமே

எனக்குத் துணைசெய்து

ஆறுதல் அளித்துள்ளீர்.


86:9 திவெ 15:4.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks