back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 7 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 7 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

நீதி வழங்குமாறு வேண்டல்
(தாவீதின் புலம்பல்; பென்யமினியனான கூசின் சொற்களைக் கேட்டுத் தாவீது ஆண்டவரை நோக்கிப் பாடியது)

1என் கடவுளாகிய ஆண்டவரே,

உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்;

என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும்

என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.

2இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல
என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்;

விடுவிப்போர் எவரும் இரார்.

3என் கடவுளாகிய ஆண்டவரே,

நான் இவற்றைச் செய்திருந்தால் –

என் கை தவறிழைத்திருந்தால்,

4என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு

நான் தீங்கிழைத்திருந்தால்,

என் பகைவனைக் காரணமின்றிக்

காட்டிக்கொடுத்திருந்தால் –

5எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்;

என்னைத் தரையில் தள்ளி

மிதித்து நசுக்கட்டும்;

என் பெருமையைப் புழுதியில்

புதைக்கட்டும். (சேலா)

6ஆண்டவரே, சினங்கொண்டு

எழுந்தருளும்;

என் பகைவரின் சீற்றத்தை

அடக்க வாரும்;

எனக்காக விழித்தெழும்;

ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர்

நீர் ஒருவரே.

7எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி

உம்மைச் சூழச் செய்யும்;

அவர்கள்மீது உயரத்தினின்று

ஆட்சி செலுத்தும்.

8ஆண்டவரே, நீரே மக்களினத்தார்

அனைவருக்கும் நீதி வழங்குபவர்;

ஆண்டவரே, என் நேர்மைக்கும்

வாய்மைக்கும் ஏற்ப

எனக்குத் தீர்ப்பளியும்.

9பொல்லாரின் தீமையை

முடிவுக்குக் கொண்டுவாரும்;

நல்லாரை நிலைநிறுத்தும்;

நீர் எண்ணங்களையும்

விருப்பங்களையும் கண்டறிபவர்;

நீதி அருளும் கடவுள்.

10கடவுளே என் கேடயம்;

நேரிய உளத்தோரை

அவர் விடுவிப்பார்.

11கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி;

நாள்தோறும் அநீதியைப்

பொறுத்துக் கொள்ளாத இறைவன்.

12பொல்லார் மனமாற்றம் அடையாவிடில்,

அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்;

வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்.

13கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்;

அம்புகளை அனல் பறக்கும்படி எய்வார்;

14ஏனெனில், பொல்லார்

கொடுமையைக் கருக்கொள்கின்றனர்;

அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி,

பொய்மையைப் பெற்றெடுக்கின்றனர்.

15அவர்கள் குழியை வெட்டி

ஆழமாகத் தோண்டுகின்றனர்;

அவர்கள் வெட்டிய குழியில்

அவர்களே விழுகின்றனர்;

16அவர்கள் செய்த கேடு

அவர்கள் தலைக்கே திரும்பும்.

அவர்கள் செய்த கொடுமை

அவர்கள் உச்சந்தலையிலேயே விழும்.

17ஆண்டவர் வழங்கிய நீதிக்காக

அவருக்கு நன்றி கூறுவேன்;

உன்னதரான ஆண்டவரின் பெயரைப்

போற்றிப் பாடுவேன்.


7:9 திவெ 2:23.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks