back to top
HomeTamilநெகேமியா அதிகாரம் - 7 - திருவிவிலியம்

நெகேமியா அதிகாரம் – 7 – திருவிவிலியம்

நெகேமியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1மதிலைக் கட்டி முடித்தபின், நான் கதவுகளை அமைத்தேன்; வாயிற் காவலர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் அமர்த்தினேன்.

2என் சகோதரர் அனானியிடமும், கொத்தளத் தலைவர் அனனியாவிடமும், எருசலேமின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தேன். ஏனெனில் அனானி மற்றவர்களை விட உண்மையானவர்; கடவுளுக்கு அஞ்சியவர்.

3நான் அவர்களைப் பார்த்து, “வெயில் ஏறும்வரை எருசலேமின் கதவுகளைத் திறக்க வேண்டாம்; காவலர்கள் போகுமுன் கதவுகளை மூடித் தாழிடுங்கள்; எருசலேமில் வாழ்வோரைக் காவலராய் நியமியுங்கள்; அவர்களுள் சிலர் குறிக்கப்பட்ட இடங்களிலும் மற்றும் சிலர் தங்கள் வீட்டிற்கு எதிரேயும் காவல் புரியட்டும்” என்று சொன்னேன்.

சிறையிருப்பினின்று திரும்பியோர் பட்டியல்
(எஸ்ரா 2:1-70)

4எருசலேம் நகர் பரந்ததும் பெரியதுமாய் இருந்தது. ஆனால் அதனுள் வாழ்ந்து வந்த மக்கள் வெகு சிலரே. வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை.

5அப்பொழுது கடவுள் என்னைத் தூண்டியபடி, தலைவர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரையும் வழிமரபு வாரியாகப் பதிவு செய்தேன். அப்பொழுது அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தவரின் தலைமுறைப் பதிவேட்டைக் கண்டுபிடித்தேன். அதில் எழுதியிருக்கக் கண்டது பின்வருமாறு:

6பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்படுத்தப்பட்டு, பின்னர் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு, எருசலேமுக்கும் யூதாவில் அவரவர் நகருக்கும் திரும்பி வந்த மாநில மக்கள் இவர்களே: செருபாபேல், ஏசுவா, நெகேமியா, அசரியா, இரகமியா, நகமானி, மோர்தக்காய், பில்சான், மிசுபெரேத்து, பிக்வாய், நெகூம், பானா.

7இவர்களோடு வந்த இஸ்ரயேல் மக்களில் ஆடவரின் எண்ணிக்கை:

8பாரோசின் புதல்வர் இரண்டாயிரத்து நூற்றுமுப்பதிரண்டு பேர்;

9செபாற்றியாவின் புதல்வர் முந்நூற்று எழுபத்திரண்டு பேர்;

10அராகின் புதல்வர் அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்;

11பாகாத் மோவாபின் புதல்வரான ஏசுவா, யோவாபு ஆகியோரின் புதல்வர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப் பேர்;

12ஏலாமின் புதல்வர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்;

13சத்தூவின் புதல்வர் எண்ணூற்று நாற்பத்தைந்து பேர்;

14சக்காயின் புதல்வர் எழுநூற்று அறுபது பேர்;

15பின்னூயின் புதல்வர் அறுநூற்று நாற்பத்தெட்டு பேர்;

16பேபாயின் புதல்வர் அறுநூற்று இருபத்தெட்டு பேர்;

17அசகாதின் புதல்வர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டு பேர்;

18அதோனிக்காமின் புதல்வர் அறுநூற்று அறுபத்தேழு பேர்;

19பிக்வாயின் புதல்வர் இரண்டாயிரத்து அறுபத்தேழு பேர்;

20ஆதினின் புதல்வர் அறுநூற்று ஐம்பத்தைந்து பேர்;

21எசேக்கியாவின் வழிவந்த அற்றேரின் புதல்வர் தொண்ணூற்றெட்டுப் பேர்;

22ஆசுமின் புதல்வர் முந்நூற்று இருபத்தெட்டுப் பேர்;

23பேசாயின் புதல்வர் முந்நூற்று இருபத்து நான்கு பேர்;

24ஆரிப்பின் புதல்வர் நூற்றுப்பன்னிரண்டு பேர்;

25கிபயோனின் புதல்வர் நூற்றுத் தொண்ணூற்றைந்து பேர்;

26பெத்லகேம், நேற்றோபாவின் ஆண்கள் நூற்று எண்பத்தெட்டுப் பேர்;

27அனத்தோத்தின் ஆண்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்;

28பெத்தசுமாவேத்தின் ஆண்கள் நாற்பத்திரண்டு பேர்;

29கிரியத்து எயாரிம், கெபிரா, பெயரோத்து ஆகியவற்றின் ஆண்கள் எழுநூற்று நாற்பத்திமூன்று பேர்;

30இராமா, மற்றும் கேபாவின் ஆண்கள் அறுநூற்று இருபத்தொரு பேர்;

31மிக்மாசின் ஆண்கள் நூற்று இருபத்திரண்டு பேர்;

32பெத்தேல், மற்றும் ஆயினின் ஆண்கள் நூற்று இருபத்து மூன்று பேர்;

33மற்றொரு நெபோவின் ஆண்கள் ஐம்பத்திரண்டு பேர்;

34மற்றொரு ஏலாமின் புதல்வர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்திநான்கு பேர்;

35ஆரிமின் புதல்வர் முந்நூற்று இருபது பேர்;

36எரிகோவின் புதல்வர் முந்நூற்று நாற்பத்தைந்து பேர்;

37லோது, ஆதிது, ஓனோ ஆகியோரின் புதல்வர் எழுநூற்று இருபத்தொரு பேர்;

38செனாவின் புதல்வர் மூவாயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது பேர்.

39குருக்கள்; ஏசுவாவின் வீட்டைச் சார்ந்த எதாயாவின் புதல்வர் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்;

40இம்மேரின் புதல்வர் ஆயிரத்து ஐம்பத்திரண்டு பேர்;

41பஸ்கூரின் புதல்வர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர்;

42ஆரிமின் புதல்வர் ஆயிரத்துப் பதினேழு பேர்.

43லேவியர்: ஓதவாவின் புதல்வரில், கத்மியேலின் வழிவந்த ஏசுவாவின் புதல்வர் எழுபத்து நான்கு பேர்;

44பாடகர்: ஆசாபின் புதல்வர் நூற்று நாற்பத்தெட்டுப் பேர்;

45வாயிற்காவலர்: சல்லூம், ஆற்றேர், தல்மோன், அக்குபு, அத்தித்தா, சோபாய் ஆகியோரின் புதல்வர் நூற்று முப்பத்தெட்டுப் பேர்.

46கோவில் ஊழியர்: சிகாவின் புதல்வர்; அசுப்பாவின் புதல்வர்; தபாயோத்தின் புதல்வர்;

47கேரோசின் புதல்வர்; சீயாவின் புதல்வர்; கிதோனின் புதல்வர்;

48இலபனாவின் புதல்வர்; அகாபாவின் புதல்வர்; சல்மாயின் புதல்வர்;

49அனானின் புதல்வர்; கிதேலின் புதல்வர்; ககாரின் புதல்வர்;

50இரயாயாவின் புதல்வர்; இரசினின் புதல்வர்; நெக்கோதாவின் புதல்வர்;

51கசாமின் புதல்வர்; உசாவின் புதல்வர்; பாசயாகின் புதல்வர்;

52பேசாயின் புதல்வரான மெயோனிமின் புதல்வர்; நெபுசசிமின் புதல்வர்;

53பக்புகின் புதல்வரான அகுப்பாவின் புதல்வர்; அர்குரின் புதல்வர்;

54பட்சிலித்தின் புதல்வர்; மெகிதாவின் புதல்வர்; அர்சாவின் புதல்வர்;

55பர்கோசின் புதல்வர்; சீசாவின் புதல்வர்; தேமாகின் புதல்வர்;

56நெட்சியாகின் புதல்வர்; அற்றிப்பாவின் புதல்வர்;

57சாலமோனுடைய பணியாளர்களின் புதல்வர்; சோற்றாவின் புதல்வர்; சொபரேத்தின் புதல்வர்; பெரிதாவின் புதல்வர்;

58ஏலாவின் புதல்வர்; தர்கோனின் புதல்வர்; கித்தேலின் புதல்வர்;

59செபத்தியாவின் புதல்வர்; அற்றிலின் புதல்வர்; பொக்கரேத்து சபாயிமின் புதல்வர்; அம்மோனின் புதல்வர்;

60கோவில் பணியாளரும் சாலமோனின் பணியாளரின் புதல்வர்களும் மொத்தம் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்.

61மேலும் தெல்மெல்லா, தெல்கர்சா, கெருபு, அதோன் இம்மேர் ஆகிய இடங்களிலிருந்து வந்தும், தங்கள் மூதாதையரின் குலத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்கள் என்பதையும் எண்பிக்க இயலாதவர்கள் பின்வருமாறு:

62தெலாயாவின் புதல்வர் தோபியாவின் புதல்வர், நெக்கோதாவின் புதல்வர் ஆகிய அறுநூற்று நாற்பத்திரண்டு பேர்.

63குருக்கள்: ஒபய்யாவின் புதல்வர்; அக்கோசின் புதல்வர்; பர்சில்லாயின் புதல்வர். பர்சில்லாய் கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மணந்ததால் அப்பெயரால் அழைக்கப்பட்டார்.

64இவர்கள் அனைவரும் தங்கள் தலைமுறை அட்டவணை எழுதப்பட்ட ஏடுகளைத் தேடியும் கிடைக்காததால் குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

65ஊரிம், தும்மிம் கொண்ட குரு ஒருவர் வரும் வரை திருத்தூயக உணவில் பங்கு கொள்ளக்கூடாது என்று அவர்களுக்கு ஆளுநர் ஆணையிட்டார்.

66மக்கள் சபையாரின் மொத்த எண்ணிக்கை நாற்பத்திரண்டு ஆயிரத்து முந்நூற்று அறுபது.

67அவர்களைத் தவிர அவர்களின் ஆண் ஊழியர்களும் பெண் ஊழியர்களும் ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு. மற்றும் அவர்களுக்கு இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும், பாடகிகளும் இருந்தார்கள்.

68அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு; கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து;

69அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து; கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்றிருபது.

70இறுதியாக குலத்தலைவர்களில் சிலர் வேலைக்காகச் கொடுத்தது பின்வருமாறு: ஆளுநர், கருவூலத்திற்கு ஆயிரம் பொற்காசுகள், ஐம்பது பாத்திரங்கள், ஐந்நூற்று முப்பது குருத்துவ ஆடைகள் ஆகியவற்றைத் தந்தார்.

71குலத்தலைவர்களில் வேறுசிலர், வேலைக்காகக் கருவூலத்திற்கு இருபதாயிரம் பொற்காசுகளும் ஆயிரத்து ஐநூறு கிலோகிராம்* வெள்ளியும் கொடுத்தார்கள்.

72ஏனைய மக்கள் கொடுத்ததாவது: இருபதாயிரம் பொற்காசுகள், ஆயிரத்து முந்நூற்று எழுபது கிலோகிராம்* வெள்ளி, அறுபத்தேழு குருத்துவ உடைகள்.

73குருக்களும், லேவியரும், வாயிற்காவலரும், பாடகரும், மக்களுள் சிலரும், கோவில் பணியாளரும் ஆகிய இஸ்ரயேலர் அனைவரும் தம் நகர்களில் குடியேறினர். ஏழாவது மாதம் வந்தபோது இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தம் நகர்களில் இருந்தார்கள்.


7:65 விப 28:30; இச 33:8.


7:71 ‘இரண்டாயிரத்து இருநூறு மினா’ என்பது எபிரேய பாடம்.
7:72 ‘இரண்டாயிரம் மினா’ என்பது எபிரேய பாடம்.
7:73 1 குறி 9:2; நெகே 11:3.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks