back to top
HomeTamilஎசேக்கியல் அதிகாரம் - 42 - திருவிவிலியம்

எசேக்கியல் அதிகாரம் – 42 – திருவிவிலியம்

எசேக்கியல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

கோவில் அருகே அமைந்த இரு கட்டடங்கள்

1பின்னர், அம்மனிதர் என்னை வடதிசை வழியாய் வெளி முற்றத்திற்கு அழைத்துச் சென்று கோவில் முற்றத்திற்கு எதிரிலும் வடதிசையில் உள்ள வெளிச் சுவருக்கு எதிரிலும் இருந்த அறைகளுக்கு இட்டுச் சென்றார்.

2வடதிசை நோக்கி வாயில் இருந்த கட்டடம் நூறு முழ நீளமும் ஐம்பது முழ அகலமும் கொண்டிருந்தது.

3உள் முற்றத்திற்கு இருபது முழத்திற்கு இரு பக்கமும் இருந்த பகுதியிலும், வெளி முற்றத்தின் நடைமேடைக்கு எதிரில் இருந்த பகுதியிலும் எதிர் எதிரான மேடையிருக்கைகள் மூன்று அடுக்குகளாய் இருந்தன.

4அறைகளின் முன்னே ஓர் உள் வழிப்பாதை இருந்தது. அதன் அகலம் பத்து முழம்; நீளம் நூறு முழம். அவ்வறைகளின் கதவுகள் வடக்குப் பக்கத்தில் இருந்தன.

5மாடி அறைகள் குறுகியவையாக இருந்தன. ஏனெனில் மேடையிருக்கைகள் கீழ்த்தள அறைகளிலிருந்தும் நடுத்தள அறைகளிலிருந்தும் கொண்ட இடத்தை விட மிகுதியான இடத்தை மேலறைகளிலிருந்து எடுத்துக்கொண்டன.

6முற்றங்களில் இருந்தது போல மூன்றாம் தளத்தில் தூண்கள் இல்லை. எனவே கீழ்த்தளம் மற்றும் நடுத்தள அறைகளைவிட அவை இடம் குறைந்தனவாய் இருந்தன.

7அறைகளுக்கும், வெளிமுற்றத்திற்கும் இணையாக ஒரு வெளிச்சுவர் இருந்தது. அது அறைகளின் முன்னால் ஐம்பது முழ நீளமுடையதாய் இருந்தது.

8வெளிமுற்றத்தை ஒட்டிய அறைகள் ஐம்பது முழ நீளமுடையவை; ஆனால், கோவிலின் வெளிக்கூடத்தின் முன் இருந்தவையோ நூறு முழ நீளம் உடையவை.

9கீழ்த்தள அறைகளுக்கு வெளிமுற்றத்திலிருந்து நுழைய கிழக்குப் பக்கத்திலே ஒரு வாயில் இருந்தது.

10கிழக்குப் பக்கத்தில் வெளிமுற்றத்தைத் தொட்டவாறும், வெளிச்சுவருக்கு எதிரிலுமாக அறைகள் இருந்தன.

11அவற்றின் முன்னால் ஒருவழிப்பாதை இருந்தது. இவை வடக்குப் பக்க அறைகளைப் போலவே இருந்தன. அவற்றைப்போலவே நீள அகலங்களும் வெளிச் செல்லும் வாயில்களும் மற்றும் அமைப்புத் தோற்றங்களும் இருந்தன.

12வடக்குப் புறவாயில் வழிகளைப்போலவே தெற்குப் புற அறைகளுக்கும் வாயில் வழிகள் இருந்தன. கிழக்குப் புறம்வரை செல்லும் சுவருக்கு இணையான வழிப்பாதையின் தொடக்கத்தில் ஒரு வாயில் இருந்தது. கிழக்குப் புறம்வரை செல்லும் சுவருக்கு இணையான வழிப்பாதையின் தொடக்கத்தில் ஒரு வாயில் இருந்தது. அதன் வழியாய் அறைகளுக்குச் செல்ல இயலும்.

13பின்னர் அம்மனிதர் என்னிடம் சொன்னார்: கோவில் முற்றத்தை நோக்கியிருக்கும் வடக்கு மற்றும் தெற்கு அறைகள் யாவும் தூய அறைகளாகும். அங்கே ஆண்டவரை அணுகிவரும் குருக்கள் உன்னத பலிப்பொருள்களை உண்ணுவர். அவர்கள் அங்கே உன்னத பலிப்பொருள்களான தானியப் படையல், பாவம் போக்கும் பலிப்பொருள்கள், குற்றநீக்கப் பலிப்பொருள்கள் ஆகியவற்றை வைப்பர். ஏனெனில், அது தூய இடமாகும்.

14குருக்கள் தூய இடங்களில் நுழைந்தபின் அவர்கள் பணிபுரியப் பயன்படுத்திய திருஉடைகளை அங்கேயே கழற்றி வைக்காமல் அங்கிருந்து வெளியேறக் கூடாது. ஏனெனில், அவை தூயவை. மக்கள் பகுதிக்குப் போகுமுன் அவர்கள் வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

கோவில் பகுதிகளின் வரையளவுகள்

15கோவிலின் உட்புறப் பகுதிகளை அளந்து முடிந்தபின், அவர் என்னைக் கிழக்கு வாயில் வழியாக வெளிக்கொணர்ந்து, கோவிலைச் சுற்றிலும் அளந்தார்.

16அவர் கிழக்குப் பகுதியை அளவுகோலால் அளந்தார். அது ஐந்நூறு கோல்கள் இருந்தது.

17அவர் வடக்குப் பகுதியை அளந்தார். அதுவும் ஐந்நூறு கோல்கள் இருந்தது.

18அவர் தெற்குப் பகுதியை அளந்தார். அதுவும் ஐந்நூறு கோல்கள் இருந்தது.

19பின்னர் அவர் மேற்குப் பக்கம் திரும்பி அளந்தார். அதுவும் ஐந்நூறு கோல்கள் இருந்தது.

20இவ்வாறு அவர் அப்பகுதியை நாற்புறமும் அளந்தார். ஒவ்வொரு புறமும் சுவர் ஐந்நூறு முழம் இருந்தது. அச்சுவர் தூயகத்தை மக்கள் பகுதியிலிருந்து பிரித்தது.


40:5-42:20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks